ரொம்ப முக்கியம்.. பாரம்பரிய கட்டடங்களை பாதுகாப்பதில் தனியார் முதலீடு! யோகி ஆதித்யநாத் திட்டம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பாரம்பரிய மற்றும் பழங்கால கட்டடங்கள், நினைவு சின்னங்களை பாதுகாப்பது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பழங்கால கட்டடங்கள், நினைவு சின்னங்களை பாதுகாக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

ஒவ்வொரு மாநிலங்களிலும் பழங்கால நினைவு சின்னங்கள் உள்ளன. இந்த நினைவு சின்னங்களை பாதுகாக்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் நினைவு சின்னங்களை பாதுகாக்கும் விஷயத்தில் தனியார் முதலீடுகளை ஈர்க்க யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.
இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி உத்தர பிரதேச மாநில அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛சுற்றுலா துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் மாநிலத்தில் சுற்றுலா துறை நடவடிக்கைகளை அதிகரிக்க மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக சத்தர் மன்சில், கோத்தி கலிஸ்தான் இ-இராம், கோத்தி தர்ஷன் விலாஸ், கோத்தி ரோஷன்-உத்-தௌலா, சுனார் கோட்டை, பர்சானாவின் ஜல் மஹால், சுக்லா தலாப், கான்பூர் மற்றும் பித்தூரின் டிகைத்ராய் பரதாரி உள்ளிட்ட இடங்களுக்கான தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன.
மேலும் சங்கரஹாலயா மந்திர் நிர்மாண பணிகளில் ராமர் தொடர்பான மரபுகள் இணைக்கப்பட வேண்டி உள்ளது. அயோத்திக்கு வரும் சுற்றுலா பயணிகள் ராமர் மற்றும் அவர் தொடர்புடைய விஷயங்களை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications