”மதர்ஸ் டெய்ரி” பால் பாக்கெட்டுகளில் சோப்புத் தூள் – உபியில் “பகீர்”!
லக்னோ: உத்தரபிரதேசத்தில் மதர்ஸ் டெய்ரி நிறுவனத்தின் பால் பாக்கெட்டுகளில் சோப்பு பவுடர் கலந்திருப்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக பால் பாக்கெட்டின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் வெளிவந்துள்ளதாகவும், பாலில் சோப்பு பவுடர் கலந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம்.

ஆனால், தங்கள் நிறுவன பாலில் சோப்பு பவுடர் கலக்கவில்லை என மதர்ஸ் டெய்ரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்த நிறுவனம், தேசிய பால் வளர்ச்சி வாரியத்தின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, மேகி நூடுல்ஸ், ஸ்டார் பக்ஸ், கெலாக்ஸ், செரிலாக், காம்ப்ளான் என்று வரிசையாக பாக்கெட் உணவுப் பொருட்கள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்ற நிலையில் அடுத்த கட்டமாக தற்போது பாலில் சோப்புத்தூள் கலப்பது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications