ஆதார் அடையாள அட்டைக்காக கைரேகை மட்டுமல்ல மரபணு சோதனையும் செய்வோம்.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
டெல்லி: ஆதார் அடையாள அட்டைக்காக, மரபணு சோதனை செய்தால் கூட தவறில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதம் முன் வைத்துள்ளார்.
பான்கார்டு, வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அப்போது மத்திய அரசு இவ்வாறு வாதம் செய்தது. மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி வாதம் முன்வைத்தார். அவர் மேலும், கூறுகையில்,
சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் போன்றவை அவசியம்.
ஒவ்வொரு போலி பான் கார்டாலும் பல ஆயிரம் கோடி அரசின் கருவூலத்திற்கு இழப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. 2009ம் ஆண்டில், பான்கார்டிலேயே கண் விழித்திரை, கை ரேகை போன்றவற்றை புகுத்தி, பான் பிளஸ் என்ற பெயரில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் ஆதார் என்ற பெயரில் தனி அடையாள அட்டையை நத்தன் நிலகேனி உருவாக்கினார். எனவே ஆதாரில் கைரேகை பெறுவதில் தப்பில்லை.
ஆதார் அடையாள அட்டையில் போலி தயார் செய்ய முடியாது. அனுமார் போட்டோவுடன் வந்த ஆதார் போன்றவை வேறு விஷயங்கள். அது போலி கிடையாது. 1975ம் ஆண்டிலேயே பான் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் ஒரு மேம்படுத்தப்பட்ட பான் அட்டை அவ்வளவுதான். அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, ஆதாரால் பலனில்லை என்று கூறும் வாதம் ஏற்புடையது இல்லை.
ஆதாருக்கு கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வதில் உரிமை மீறல் கிடையாது. பிற நாடுகளில் அடையாள அட்டை வழங்க மரபணு சோதனை செய்யப்படுகிறது.
ஆதார் அடையாள அட்டைக்காக இந்தியாவிலும் கூட மரபணு சோதனை செய்யலாம், அதுகூட தவறு கிடையாது என்று என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications