ஜெ., மமதா, மாயாவதி ஆதரவை கோரும் நிலை எங்களுக்கு வராது: மோடி நம்பிக்கை
அகமதாபாத்: லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஜெயலலிதா, மமதா பானர்ஜி, மாயாவதி ஆகியோரின் ஆதரவைக் கோரும் நிலைமை பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு வராது.. ஆட்சி அமைக்க தேவையான இடங்களைப் பெறுவோம் என்று அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு மோடி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
லோக்சபா தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பலத்த தோல்வியை பெற்றுத் தரும். 100 தொகுதிகளில் காங்கிரசால் வெல்ல முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது. தோல்வி நிச்சயம் என்பதால் அக்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன.

லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான எம்.பி.க்கள் ஆதரவு கிடைக்கும். மமதா, மாயாவதி, ஜெயலலிதா போன்றோரின் ஆதரவைக் கேட்கும் நிலை வராது.
தோல்வி நிச்சயம் என்பதாலேயே காங்கிரஸ் கட்சி துணைத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறியுள்ளது.
நாட்டில் மோடி அலை மட்டும் வீசவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையும் வீசுகிறது. நான் ஆட்சியில் அமருவதால் பிற மதத்தினர் அச்சப்பட தேவையில்லை.
நான் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சொர்க்கமாக மாற்றுவேன் என சொன்னதே இல்லை. அதிசயங்களை மக்கள் எப்போதுமே விரும்புவதில்லை. திடமான, திறமையான, அறிவார்ந்த அரசை தான் விரும்புகின்றனர்.
அரசியல் காரணங்களுக்காக நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேட்டையாடப்படுகிறேன்,. அந்த வலி எனக்குத் தெரியும். அதனால் தான் பழிவாங்கும் அரசியலை நான் வெறுக்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ள மாட்டேன். அப்படியெனில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று அர்த்தம்.
இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications