மேற்கு வங்கத்திலிருந்து பங்களா.. பெயர் மாற்றத்தை துரிதப்படுத்த மோடிக்கு மம்தா கடிதம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்திலிருந்து பங்களா என பெயர் மாற்றக் கோரும் தீர்மானத்தின் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தான் முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட, தனி நாடாக பிரிக்கப்பட்டது. இப்போதைய வங்கதேச நாட்டு பகுதிகள் பாகிஸ்தானுடன் இருந்தன. 1971இல் கிழக்குப் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று வங்கதேசம் என்ற புது நாடாக உருவானது.
இந்த நிலையில்தான், மேற்கு வங்கம் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வங்காளிகளிடம் எழுந்தது. கிழக்கு வங்கம் என்ற ஒரு மாநிலம் இல்லாத போது மேற்கு வங்கத்திற்கான தேவை என்ன என்ற நியாயமான கோரிக்கை அது.

புதிய பெயர்
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, மேற்கு வங்க மாநிலத்திற்கான புதிய பெயரை முன்மொழிந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆங்கிலத்தில் பெங்கால் எனவும், வங்கமொழியில் பங்களா எனவும், ஹிந்தியில் பங்காள் எனவும் மாநிலத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.

பங்களா
ஆனால் இப்படி 3 மொழிகளில் மாநிலத்தின் பெயரை குறிப்பிடுவது சாத்தியமில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துவிட்டது. இதையடுத்து, திருத்தப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதிய தீர்மானத்தை மேற்கு வங்க சட்டசபையில் இன்று அரசு தாக்கல் செய்தது. இந்த தீர்மானத்தின்படி, 'பங்களா ' என மேற்கு வங்க மாநிலம் அழைக்கப்படும்.

பாஜக அரசு
இந்த தீர்மானம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெயர் மாற்றத்துக்கான ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கு பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மம்தா பானர்ஜி
இது போன்ற முயற்சியால் மேற்கு வங்கத்தின் வரலாறு மறைக்கப்பட்டுவிடும் என கூறி வந்தது. பெயர் மாற்றம் செய்யும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

சட்டத்திருத்தம்
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்பி ரிதப்ரதா பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அவர் கூறுகையில் ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு அரசியலமைப்பில் சட்டம் கொண்டு வரவேண்டும். இது தொடர்பான காரணிகளை பரிசீலித்து சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications