"கன்றுக்குட்டியை".. கதற கதற.. அதுவும் மலையடிவாரத்தில்.. 4 வெறியர்கள்.. வீடியோவை கண்டு அலறிய மக்கள்
4 இளைஞர்கள் பசுமாட்டை பலாத்காரம் செய்துள்ளனர்
ஜெய்ப்பூர்: கன்றுக்குட்டியை பலாத்காரம் செய்திருக்கிறார்கள் 4 இளைஞர்கள்.. 4 பேருமே 20 வயதுக்கும் குறைவானவர்கள்தானாம்..!
சில மாதங்களுக்கு முன் மைசூரில் ஒரு கொடிய சம்பவம் நடந்தது.. மைசூரு விவி புரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கோகுலம் 3வது ஸ்டேஜ் பகுதியில் இளைஞர் ஒருவர், ஒரு தெருநாயுடன் உறவு கொண்டிருந்தார்.. அது ஒரு பெண் நாய்..
அந்த நாயுடன் நடுத்தெருவில் பலவந்தமாக பாலியல் உறவு கொண்டிருந்ததை, அந்த வழியாக சென்றவர்கள் கவனித்துள்ளனர்.. அதில் ஒருவர் இதை வீடியோவாக படம் பிடித்து, அதை சோஷியல் மீடியாவிலும் போட்டுவிட்டார்..

இளைஞர்
அது வைரலானதுடன், பலருக்கும் தூக்கி வாரிப்போட்டது... மைசூரு மாவட்ட விலங்குகள் பாதுகாப்பு துறை அதிகாரி கேபி ஹரிஷ், விவிபுரம் ஸ்டேஷனுக்கு வந்து புகார் தந்தார்.. அந்த வீடியோ ஆதாரத்தையும் போலீசாரிடம் தந்தார்.... அதை பெற்ற போலீசார் இளைஞரை கைது செய்ததுடன் அவர் மீது பிரிவுகளையும் வழக்கு பதிவு செய்தனர்.. பிறகு, பலாத்காரம் செய்யப்பட்ட அந்த தெருநாயை தேடி பிடித்தனர்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த பெண் நாய்க்கு மெடிக்கல் செக்கப்பும் செய்தனர்..

மிருகத்தனம்
இது ஒரு நாய்க்கு எதிரான மிருகத்தனம் என்றும், பலர் விலங்குகளை மதிக்காததுதான், இதுபோன்ற பாலியல் நிகழ்வுகளுக்கு காரணம் என்பதால், இதுபோன்ற கொடூர குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.. ஆனால், அந்த நபர் மீது தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதுபோல் தெரியவில்லை.. மிருகங்களை பலாத்காரம் செய்வது இயற்கைக்கு முரணான விஷயம் என்றபோதிலும், இது தொடர்பாக கைதாபவர்களின் எண்ணிக்கையும் குறைவது போல தெரியவில்லை.

இளைஞர்கள்
அதிலும் வட மாநிலங்களில் இதுபோன்ற குற்றங்கள் அதிகமாக காணப்படுகின்றன.. திருப்பூரில் கடந்த வருடம், பசு மாட்டை கடத்தி சென்று, பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள் இளைஞர்கள் 3 பேர்.. ஆனால், இவர்கள் 3 பேருமே வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்.. பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.. இப்போதும் ஒரு சம்பவம் வடமாநிலத்தில் நடந்துள்ளது.. ஒரு பசு கன்று குட்டியை 4 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

கன்றுக்குட்டி
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் அருகே சோபாங்கி என்ற இடம் உள்ளது... இங்குள்ள ஒரு மலைப்பாங்கான இடத்தில் 4 பேர் சுற்றி கொண்டிருந்தனர்.. 4 பேருக்குமே 20 வயதுதான் இருக்கும்.. அவர்கள் அருகில் ஒரு கன்று குட்டி படுத்து கொண்டிருந்தது.. அந்த கன்றுகுட்டியைதான் 4 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.. ஒருவன் அந்த கன்றை கெட்டியாக பிடித்துக்கொள்ள, இன்னொருவன் பலாத்காரம் செய்துள்ளான்..

செல்போன்
இதை மற்றொருவன் செல்போனில் வீடியோவாக படமெடுத்துள்ளான்.. இதை இவர்களின் நண்பர்கள் சிலர் வேடிக்கையும் பார்த்துள்ளனர்.. வீடியோவை சோஷியல் மீடியாவில் இந்த இளைஞர்களே பதிவிட்டு விடவும் அது வைரலாகிவிட்டது. அப்போதுதான் சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கே தங்கள் ஊருக்குள் இப்படி ஒரு விஷயம் நடப்பது தெரியவந்துள்ளது.. உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்து 4 இளைஞர்களை கைது செய்தனர்..

கைது
ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா என்பதுதான் அந்த இளைஞர்களின் பெயர்கள்.. போலீசார் கைது செய்ததுமே, கிராம மக்கள் அவர்களை சுற்றி வளைத்து ஒன்றுகூடிவிட்டனர்.. 4 பேரையும் ஜெயிலில் போட வேண்டாம், இப்போதே தூக்கில் போட வேண்டுமென்று போராட்டம் நடத்தினார்கள்.. பொதுமக்களை சமாதானப்படுத்திய போலீசார் 4 இளைஞர்களையும் கைது செய்து ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications