ஷாக் ஆன பாஜக.. குப்பை வண்டியில் பிரதமர் மோடி, யோகி போட்டோக்கள்.. மாநகராட்சி ஊழியர் அதிரடி சஸ்பெண்ட்
குப்பை வண்டியில் யோகி படங்களை எடுத்து சென்ற ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
கான்பூர்: குப்பை வண்டியில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் போட்டோக்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி தொழிலாளி, டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது... சமீப காலமாகவே, முதல்வர் யோகி குறித்த விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது..
இந்நிலையில், அம்மாநிலத்தின் மதுராவில், மாநகராட்சி தொழிலாளி ஒருவர் குப்பை வண்டியை தள்ளிச் செல்வது போன்ற வீடியோ சோஷியல் மீடியாவில் திடீரென வைரலானது...

குப்பை வண்டி - போட்டோக்கள்
இந்த வீடியோவை சிலர் எடுத்து கொண்டிருக்கின்றனர்.. அப்போது, குப்பை வண்டி இழுத்து செல்லும் அந்த தொழிலாளியை நிறுத்துமாறு சொல்கிறார்கள்.. பிறகு, அருகில் சென்று, குப்பை வண்டியில் இருந்து பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியவர்களின் உடைந்து போன போட்டோக்களை எடுத்து கேமிரா முன்பு காட்டுகின்றனர்.. அதைப் பற்றி அந்த நபரிடம் அவர்கள் கேட்கின்றனர்..

குப்பை வண்டி
அதற்கு அவர், "எனக்கும், இதுக்கும் சம்மந்தமில்லை. இவை குப்பையில் கிடந்தன. அதனால் நான் அவற்றை குப்பை வண்டியில் எடுத்து அப்புறப்படுத்த கொண்டு செல்கிறேன்" என்று பதில் சொல்கிறார். உடனே அந்த நபர்கள், அந்த போட்டோக்களை எடுத்து தண்ணீரால் கழுவுகிறார்கள்.. பிறகு,"இந்த போட்டோக்களை நாங்களே கொண்டு செல்கிறோம்.,.. மோடியும், யோகியும் இந்த நாட்டின் ஆன்மாக்களாக இருப்பவர்கள்" என்று அந்த நபரிடம் சொல்லிவிட்டு நகர்கின்றனர்..

கண்டனம்
இந்த வீடியா வெளியான நிலையில், பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.. ஒரு நாட்டின் பிரதமர், மாநில முதல்வர் என்றுகூட இல்லாமல் இப்படியா நடந்து கொள்வது, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைள் வெடித்தன. இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட தொழிலாளி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.. அவரை பணிநீக்கம் செய்திருப்பதாக மதுரா-பிருந்தாவனின் கூடுதல் நகராட்சி ஆணையர் சத்யேந்திர குமார் திவாரி உறுதிப்படுத்தி உள்ளார்..

பிருந்தாவன்
இதையடுத்து, அந்த ஒப்பந்தத் தொழிலாளியின் வேலை பறிபோயுள்ளது.. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த ஒப்பந்தத் தொழிலாளி பிரதமர் மற்றும் சில தலைவர்களின் படங்களைத் தவறுதலாக குப்பை வண்டியில் எடுத்துக் கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது என்று மதுரா-பிருந்தாவனின் கூடுதல் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.. மேலும் இதுபோன்ற தவறுகள் இனி நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications