‛‛இறங்கி வந்த கங்கா.. கூடிய நல்ல நேரம்’’.. காலை 11.40க்கு வேட்புமனுதாக்கல் ஏன்? மோடியின் சாஸ்திரம்
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி தான் போட்டியிடும் வாரணாசி லோக்சபா தொகுதியில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வேட்புமனுவை பிரதமர் மோடி காலை 11.40 மணிக்கு செய்தார். இந்நிலையில் தான் வேட்புமனுத்தாக்கலுக்கு பிரதமர் மோடி ஏன் காலை 11.40 மணியை தேர்வு செய்தார்? என்பது பற்றியும், அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு இப்போது 3வது முயைாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் களமிறங்கி உள்ளார்.

இந்த தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் முறையில் பிரதமராகும் முனைப்பில் பிரதமர் மோடி உள்ளார். இந்த வாரணாசி தொகுதிக்கு ஜுன் 1ம் தேதி (கடைசி கட்ட லோக்சபா தேர்தல்) லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் வாரணாசியில் தேர்தல் வேட்புமனு தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று வாரணாசியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தாஸ்வாமேத் காட்டில் கங்கை நதியில் ஸ்நானம் செய்து கங்கா பூஜை செய்தார். அதன்பிறகு வாரணாசியில் உள்ள கால பைரவா கோவிலில் பூஜை செய்து தரிசித்தார். அதன்பிறகு தான் பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி காலை 11.40 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இந்த நேரம் தான் தற்போது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்! முன்மொழிந்த 4 பேர் யார் தெரியுமா
மே மாதம் 14ம் தேதியை வேட்புமனுத்தாக்கலுக்கு பிரதமர் மோடி முதலிலேயே தேர்வு செய்தார். ஏனென்றால் இது கங்கா சப்தமி தினமாகும். இந்த நாளில் கடவுள் கங்கா நேரடியாக பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது. இது இந்துக்களை பொறுத்தமட்டில் நல்ல நாளாக பார்க்கப்படுகிறது. மேலும் இன்னொரு சிறப்பு என்றால் கங்கா சப்தமி தினத்தில் புஷ்ய நட்சத்திரம் ஒன்றாக இணைகிறது. இதனால் இந்த நாள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
அதாவது இன்று புஷ்ய நட்சத்திரம் என்பது காலை 11.23 மணி முதல் 1.05 மணி வரை இருக்கும். இது இந்துக்கள் நம்பிக்கையில் மிகவும் நல்ல நேரமாகும். இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை செய்வது வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நேரம் என்பது அபிஜித் முகூர்த்தம் மற்றும் ஆனந்த் யோக் ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது. அதனால் இதற்கிடையே தான் இன்றைய தினம் 11.40 மணிக்கு மனுத்தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications