அசிங்கப்படுத்த முயன்றவனின் நாக்கை கடித்து துப்பி போலீசில் கொடுத்த பெண்
கொச்சி: கேரளாவில் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பக்கத்து வீட்டுக்காரரின் நாக்கை கடித்து துண்டாக்கியுள்ளார் பெண் ஒருவர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பெண் ஒருவர் திங்கட்கிழமை இரவு தனது வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்பொழுது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 30 வயது ஆண் அவர் மீது தாவிக் குதித்துள்ளார்.
அவரை மானபங்கப்படுத்த முயன்றுள்ளார்.

நாக்கு
தன் மீது பாய்ந்து மானபங்கப்படுத்த முயன்ற நபரால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். அவனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவனின் நாக்கின் ஒரு பகுதியை கடித்து துண்டாக்கினார்.

போலீஸ்
2 செ.மீ. அளவுக்கு நாக்கை துண்டாக்கிவிட்டார் அந்த பெண். நாக்கு துண்டான வேகத்தில் அந்த நபர் தப்பியோடிவிட்டார். துண்டாக விழுந்த நாக்குப் பகுதியுடன் அந்த பெண் காவல் நிலையத்திற்கு சென்றார்.

உண்மை
நாக்கை போலீசாரிடம் கொடுத்துவிட்டு நடந்த சம்பவம் பற்றி அந்த பெண் விளக்கினார். அவரின் புகாரின்பேரில் போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் ஏற்கனவே பெண்களிடம் தகாத முறையில் நடந்து போலீசில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை
சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய அந்த நபர் தனக்கு விபத்தில் நாக்கு துண்டாகிவிட்டதாகக் கூறி மருத்துவமனை ஒன்றில் சேர்ந்துள்ளார். இதை கண்டுபிடித்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை முடிந்த பிறகு அவரை கைது செய்துள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications