ஆசையாக வேலைக்கு வந்த பெண்கள்.. 10 பேரையும் பக்கத்தில் நிர்வாணமாக நிற்க வைத்து.. குஜராத்தில் கொடுமை
காந்திநகர்: மாதவிடாய் சோதனை நடத்துவதற்காக மாணவிகள் உள்ளாடைகளை கழற்றிய கொடுமை மறக்கும் முன்பாக, குஜராத்தில் மற்றொரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத்தின் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றான சூரத்தில்தான், இந்த அராஜகம் நடந்துள்ளது. சூரத் மாநகராட்சியில் பயிற்சி கிளர்க்காக பணியாற்ற தகுதி வாய்ந்த பெண்களுக்கு, 3 வருடங்களாக பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சி காலம் தற்போது நிறைவுற்றது.

விதிமுறைப்படி, பணியில் சேருவதற்கு முன்பாக, இந்த பயிற்சியாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட வேண்டியது அவசியம். அதன்படி, சூரத் மாநகராட்சி மருத்துவ கல்வி மற்றும் ஆய்வு இன்ஸ்ட்டிடியூட் மருத்துவமனையில் நேற்றைய தினம், 10 பெண்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், பரிசோதனை நடத்தப்பட்ட விதம்தான் மிக மோசமாக இருந்துள்ளது. ஒவ்வொரு பெண்களாக அறைக்குள் அழைத்து, பெண் டாக்டர் உடல் பரிசோதனை நடத்துவதற்கு பதிலாக, 10 பேரையும், ஒரே இடத்தில் நிர்வாணமாக நிற்க வைத்துள்ளனர். திருமணமாகாத பெண்களுக்கும் கருவுற்றுள்ளாரா என பரிசோதனை நடத்தியுள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அறிந்ததும், சூரத் மாநகராட்சி, ஊழியர் சங்கம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளை விசாரித்து 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க, மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் டாக்டர் கல்பனா தேசாய், உதவி மாநகராட்சி ஆணையர் காயத்ரி ஜரிவாலா மற்றும் நிர்வாக பொறியாளர் துருபி கலத்தியா ஆகியோரைக் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
"சோதனைக்காக அறையில் பெண்களை ஒருவரையடுத்து அடுத்தவரை அழைப்பதற்கு பதிலாக, பெண் மருத்துவர்கள் அவர்களை 10 பேராக மொத்தமாக, நிர்வாணமாக நிற்க வைத்தார்கள். மற்றவர்களுடன் நிர்வாணமாக நிற்க அவர்களை கட்டாயப்படுத்துவது இழிவான செயல். இந்த நடைமுறை சட்டவிரோதமானது மற்றும் மனிதகுலத்திற்கு எதிரானது." என்று தொழிற்சங்கம் தனது புகாரில் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் அகமது ஷேக் கூறுகையில், பரிசோதனையின் போது கர்ப்பம் குறித்த அபத்தமான கேள்விகளைக் கேட்டுள்ளார்கள். அந்தக் குழுவில் உள்ள திருமணமாகாத பெண்கள் கூட, அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா இல்லையா என்பதைச் சரிபார்ப்பதற்கான உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மற்ற பெண்களுக்கு முன்னபாக, சங்கடமான சூழ்நிலையில் நிற்க வைக்கப்பட்டனர், இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத்தின் பூஜ் டவுனில், சில நாட்கள் முன்பாக, கல்லூரி மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து, அவர்கள் மாதவிடாய் காலத்தில் உள்ளனரா என்பதை, சோதித்து பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அடுத்த சர்ச்சையில், குஜராத் மாநிலத்தின் மற்றொரு பகுதி சிக்கியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications