என் தலையை மம்தா உதைக்கட்டும்.. ஆனால் மக்கள் கனவுகள் உதைபட அனுமதிக்க மாட்டேன்.. பிரதமர் உருக்கம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, என்ன நடந்தாலும் வங்கத்து மக்களின் கனவுகள் உதைபடுவதை அனுமதிக்க மாட்டேன் என்று உருக்கமாகப் பேசியுள்ளார்,
மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 30 தொகுதிகளில் வரும் மார்ச் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் வாரமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக, மேற்கு வங்கத்தில் இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது தோற்படித்தவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக களமிறங்கியுள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் வங்கத்தில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

உண்மையான மாற்றம்
இந்நிலையில், அவர் இன்று மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மேற்கு வங்கத்திற்கு உண்மையான மாற்றத்தை பாஜக கொண்டு வரும். இனி வங்கத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, மோசடி ஆகியவற்றுக்கு இடம் இல்லை" என்று ஆவேசமாகப் பேசினார்.

தோல்வியை ஒப்புக்கொண்டார்
விரைவில் அமையும் பாஜக அரசு கொண்டு வரும் திட்டங்களால் வங்கத்தில் உள்ள ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் மிரட்டி பணம் பறித்தவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மம்தா பானர்ஜி ஏற்கனவே தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்றும் இதனால்தான் அவர் ஈவிஎம் இயந்திரங்கள் குறித்துக் கேள்வி எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திரிணாமுல் விளம்பரம்
இந்தத் தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக அரியணை ஏற வேண்டும் என்பதில் மம்தா உறுதியாக உள்ளார். இதனால் இடதுசாரிகளும் தங்களுடன் கைகோர்க்க வேண்டும் என அழைப்புவிடுத்த அவர் பாஜகவுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியின் முகம் இருக்கும் புட்பாலை எட்டி உதைப்பது போன்ற போஸ்டர்களை இணையத்தில் வெளியிட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

எட்டி உதைக்கட்டும்
இது குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மம்தா பானர்ஜி எனது தலையை எட்டி உதைக்கலாம். அதை நான் அனுமதிப்பேன். ஆனால் மேற்கு வங்க மக்களின் கனவுகள் உதைபடுவதை என்றும் நான் அனுமதிக்க மாட்டேன். மேற்கு வங்க மக்களுக்குச் சேவை செய்ய நான் எப்போதும் தயாராகவே உள்ளேன்" என்று மிகவும் உருக்கமாக அவர் பேசினார்.
-
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
மம்தாவிற்கு பேரிடி.. 20 அதிருப்தி எம்பிக்கள் "என்சிபிஐ" கட்சியில் ஐக்கியம்.. பின்னணியில் மெகா பிளான் -
தேர்தலில் வெறும் 822 வாக்குகள்! ஆனா ஓவர் நைட்டில் நாட்டிலேயே 5வது பெரிய கட்சியாக மாறிய NCPI.. எப்படி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications