கொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி
மாட்ரிட்: கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கிய ஸ்பெயினின் 113 வயது பாட்டி முழுமையாக குணமடைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
Recommended Video
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குழந்தைகளையும் முதியவர்களையும் குறிவைத்து கொல்கிறது. இதனால் கொரோனாவின் பிடியில் சிக்காமல் இருக்க முதியவர்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனாவின் பிடியில் சிக்கிய முதியவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பால் மீண்டு வந்திருக்கின்றனர். இப்படி மீண்டு வந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஸ்பெயினின் 113 வயது பாட்டி Maria Branyas- மரியா பிரான்யாஸ்.
ஸ்பெயின் நாட்டின் அதிக வயதுடைய மூதாட்டிதான் மரியா பிரான்யாஸ். அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவர். 1907-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் பிறந்தவர் மரியா பிரான்யாஸ். இவரது தந்தை ஸ்பெயினைச் சேர்ந்த பத்திரிகையாளர். முதலாவது உலகப் போரின் போது படகு மூலம் ஸ்பெயினில் தஞ்சமடைந்தார்.
1918-19களில் உலகையே உலுக்கிய ஸ்பானிஸ் ப்ளூ தாக்குதலில் இருந்தும் 1936- 39களில் நடைபெற்ற ஸ்பெயினின் உள்நாட்டு போரிலும் உயிர் தப்பியவர் மரியா பிரான்யாஸ். இவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.
இதனால் தனிமைப்படுத்தப்பட்ட மரியா பிரான்யாஸ், ஒரு மாதம் முழுமையாக ஓய்வில் இருந்தார். தற்போது மரியா பிரான்யாஸின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் இருக்கிறது என அறிவித்திருக்கின்றனர் மருத்துவர்கள். கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி மீண்டு வந்த மரியா பிரான்யாஸ் எனும் இந்த 113 வயது பாட்டிதான் உலகின் ஆச்சரிய டாப்பிக்குகளில் ஒருவராகவும் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications