ஷாக்.. மொத்தம் 545 டாக்டர்களாம்.. ரெண்டே வாரத்தில் தொற்றுக்கு பலி.. அதிர்ச்சியில் இந்தோனேஷியா
ஜகார்த்தா: மொத்தம் 545 டாக்டர்களாம்.. இந்தோனேஷியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் தொற்று அதிகமாக இருக்கிறது.. இதற்கு இந்தோனேசியாவும் விதிவிலக்கல்ல.. தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. குறிப்பாக டெல்டா வகை வைரஸ் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் பரவி வருகிறது.

இதன் மூலம் ஆசியாவில் கொரோனாவின் மையப்பகுதியாக இந்தோனேசியா உருமாறி இருக்கிறது.. இந்தோனேசியாவை பொறுத்தவரை கிராமப்பகுதிகளே அதிகமாக உள்ளது.. அதனால் போதுமான ஆஸ்பத்திரிகளோ, மருத்துவ கட்டமைப்புகளோ இல்லை..
இவர்களுக்கு தொற்று வந்தால் சிகிச்சை கிடைக்காமல் அப்படி அப்படியே இறந்துவிடும் கொடுமை நடந்து வருகிறது.. நேற்று முன்தினம் 44 ஆயிரத்து 721 பேரை தொற்று தாக்கி உள்ளது... இதில் 1,093 பேர் உயிரிழந்து உள்ளனர்...
இதில் கொடுமை என்னவென்றால், டாக்டர்களுக்கும் நர்ஸ்களுக்கும் தொற்று ஏற்பட்டுவிடுவதால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள், நர்சுகள் இல்லை.. அதனால் அவர்களும் தொற்று பாதித்து உயிரிழந்து வருகிறார்கள்.. இப்படி கடந்த 2 வாரத்தில் மட்டுமே 114 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 545 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்... இதில் கடந்த வாரம்தான் அதிக அளவு டாக்டர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது... இது அந்நாட்டு மக்களுக்கு பெருத்த கவலையை அளித்து வருகிறது.












Click it and Unblock the Notifications