யு.எஸ். விமான விபத்தில் 6 டாக்டர் தம்பதிகள் பலி: அனாதையான 11 குழந்தைகள்
நியூயார்க்: அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பல் டாக்டர் தம்பதிகள் பலியாகியுள்ளனர். இதனால் அவர்களின் 11 குழந்தைகள் ஆதரவற்றவர்களாகியுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கிஸ்ஸிம்மியில் நடந்த பல் மருத்துவர்களுக்கான மாநாட்டில் 3 பல் டாக்டர் தம்பதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மாநாடு முடிந்த பிறகு ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானத்தில் மிசிசிபியில் உள்ள ஆக்ஸ்போர்டுக்கு கிளம்பினர்.
விமானம் அலபாமா மாநிலத்தில் உள்ள டுஸ்கலூசா வான்வெளியில் பறந்தபோது பிரச்சனை ஏற்பட்டது.
விமானம்
விமானத்தில் காலை 11.10 மணிக்கு கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் டுஸ்கலூசா விமான நிலையம் அருகே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளான 3 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் சென்றனர்.
6 பேர் பலி
மீ்ட்பு குழுவினர் விரைந்து சென்ற போதிலும் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. விமானத்தில் இருந்த திருமணமான 3 ஜோடிகளுமே பலியாகிவிட்டனர். இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 குழந்தைகள்
விமான விபத்தில் பலியானவர்களுக்கு 11 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே நாளில் தாய், தந்தையை இழந்து ஆதரவற்றவர்களாகிவிட்டது அப்பகுதி மக்களை கவலை அடைய வைத்துள்ளது.
3 குழந்தைகள்
விபத்தில் பலியானா ஆக்ஸ்போர்டை சேர்ந்த பல் மருத்துவர்களான ஜேசன் மற்றும் லீ பரீசுக்கு 10, 7 மற்றும் 5 வயதில் 3 குழந்தைகள் உள்ளனர். அதில் கடைசி குழந்தை கடந்த வாரம் தான் பள்ளிக்கு செல்லத் துவங்கியுள்ளது. பலியான மற்றொரு தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.