பாகிஸ்தானில் பயங்கரம்! பயணிகள் வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு! குழந்தைகள் உள்பட 38 பேர் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வடமேற்கில் உள்ள பழங்குடியின பகுதியில் பயணிகள் வாகனத்தை குறிவைத்து, துப்பாக்கி ஏந்திய நபர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 29 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் வடமேற்கில் உள்ள பழங்குடியின மாவட்டம் குர்ரம். இங்குள்ள இடத்தில் இருந்து பெஷாவருக்க சென்று கொண்டிருந்த பயணிகள் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

40 வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்த நிலையில், இரண்டு வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.
பலர் படுகாயம் அடைந்து இருப்பதால் பலி எண்ணிக்கை அஞ்சக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.
தற்போது தாக்குதல் நடைபெற்றுள்ள இடம் நீண்ட காலமாகவே பதற்றம் நீறைந்த இடமாக உள்ளது. இஸ்லாமியர்களில் இரு பிரிவினர் இடையே நீண்ட காலமாக நிலபிரச்சினை நீடித்து வருகீறது. கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற மோதலில் 16 பேர் கொல்லப்பட்டு இருந்தனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications