அடுத்தடுத்து தாக்கும் பூகம்பம்.. அன்று துருக்கி.. இன்று நியூசிலாந்து! 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வெலிங்டன்: துருக்கி நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே உலக நாடுகள் மீளாத நிலையில், இப்போது நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் கடந்த வாரம் அடுத்தடுத்து மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது.. ரிக்டர் அளவுகோலில் 7க்கு மேல் முதலில் அந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதனால் அங்குக் கட்டிடங்கள் அப்படியே சரிந்தன.

இதுவரை 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் ரிக்டர் அளவில் 6.1ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இந்திய நேரப்படி 2.48 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்துக் கூடுதல் தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications