ஆப்கானில் 14 பேரை பலி கொண்ட அமெரிக்கா ராணுவ விமான விபத்து.... தலிபான்கள் சுட்டு வீழ்த்தினர்?
காபூல்: ஆப்கானிஸ்தானில் 14 பேரை பலி கொண்ட அமெரிக்காவின் சி-130 ஹெர்குலிஸ் ரக விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் அறிவித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் விமான நிலையத்தில் சி-130 ரக விமானம் விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 14 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்களில் 6 பேர் அமெரிக்கர்கள். விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் என்னவென்று உடனடியாக அறிவிக்கப்படவில்லை.
சி-130 விமானம் ராணுவத்தின் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டது. இவை பெரும்பாலும் கடற்படை வீரர்கள் மற்றும் கனரக பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகிறது.
#BREAKING: Taliban says shot down crashed US C-130 plane in Afghanistan
— Agence France-Presse (@AFP) October 2, 2015
இதனிடையே தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தமது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் முஜாஹிதீன்கள்தான் அமெரிக்காவின் விமானத்தை சுட்டு வீழ்த்தினர். அதில் 15 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.