ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்
பெர்லின்: ஜெர்மனியின் பிராங்பேர்ட் அருகே நேற்று இரவு நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டனர், எத்தனை பேர் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹனாவ் நகரில் உள்ள ஷிஷா பார்களை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்டு நடத்தினர். 90 ஆயிரம் மக்கள் வசிக்கும் அந்த நகரில் துப்பாக்கிச்டு நடந்திருக்கிறது.

முதல் தாக்குதல் உள்ளூர் நேரப்படி இரவு 10மணிக்கு (அதாவது இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு) இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவத்திற்கு பின் காரில் ஏறி தப்பி ஓடியிருக்கிறார்கள். அப்போது இரண்டாவது துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது என ஜெர்மன் போலீசார் தெரிவித்தனர்.
முதல் தாக்குதலில் 3 பேரும் , 2வது தாக்குதலில் 5 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications