பத்து வருட கால ஒத்துழைப்பிற்கு நன்றி – பயனாளிகளுக்கு 'ஆர்குட்' உருக்கமான கடிதம்
நியூயார்க்: சமூக வலைதளங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய கூகுளின், ஆர்குட் செப்டம்பருடன் மூடு விழா காண இருக்கிறது.
இந்நிலையில் தன்னுடைய கடைசி செய்தியாக ஆர்குட் அதன் பணியாளர்களுக்கு ஒரு உருக்கமான கடிதத்தை அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில், "நம்முடைய 10 வருட காலத்தில் எவ்வளவோ விசயங்களை பகிர்ந்து கொண்டோம், நட்பின் இணைப்புகளை உருவாக்கினோம். ஆனால், தற்போது நாம் ஆர்குட்டிற்கு கடைசி வணக்கம் சொல்லும் நிலையில் உள்ளோம்.

கடந்த பல வருடங்களாக, யூ டியூப், பிளாக்கர், கூகுள் பிளஸ் போன்றவை உலகின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கும் பணியை செய்து வருகின்றன.
இதனால் ஆர்குட்டின் பலம் குறைந்துவிட்டதாலும், நாங்கள் இந்த வலைதளங்களின் சக்தியை அதிகப் படுத்த உழைக்க வேண்டியுள்ளதாலும் இந்த நிலை உருவாகியுள்ளது.
அதனால், ஆர்குட் வலைதளத்தை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் மூட உள்ளோம். ஆர்குட்டிலுள்ள உங்களுடைய பதிவுகளை, புகைப்படங்கள், செய்திகளை கூகுள் டேக்-அவுட் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களுக்கு தேவைப்படவில்லை எனில் கூகுள் பக்கத்தில் இருந்து உங்கள் ஆர்குட் கணக்கை நீக்கிக் கொள்ளலாம்.
கிட்டதட்ட மிக அருமையான பத்து வருடங்கள்....தற்போதும் மிக ஆர்வத்துடன் ஆர்குட் பக்கங்களை உபயோகிப்பவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வேறு சில சமூகவலைதளப் பக்கங்கள் உங்களுடைய எண்ணங்களை அடுத்தடுத்த காலக்கட்டங்களுக்கு பதிவு செய்யும் என்பதை மனமாற நம்புகின்றோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications