ப்ப்பா.. என்னா குளிரு, பரவாயில்லை மறக்காம கல்யாணத்திற்கு வந்துருங்க.. அண்டார்டிகாவில் ஒரு சாகசம்!
மனிதன் வாழ்வதற்கான சாதகமான சூழல் இல்லாத அண்டார்டிகாவில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஆய்வு ஜோடி திருமணம் செய்து கொள்ளப் போகிறது.
லண்டன்: பனிப்பிரதேச கண்டமான அண்டார்டிகாவில் முதல் முறையாக பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். அனைவருக்குமே திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வுதான். சிலர் ஆடம்பரமாகவும், மேலும் சிலர் வசதியிருந்தாலும் எளிமையாகவும் நடத்துவர்.
மேலும் சிலரோ வானில் பறந்தபடியே திருமணம் செய்வது, கப்பலில் திருமணம் செய்வது, நடு கடலில் திருமணம் செய்வது என்று சாதனைகளை புரிவர். ஆனால் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஆய்வு ஜோடி எப்படி திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள் தெரியுமா? பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில்....

குளிர்பிரதேசம்
புவியின் தென் துருவமான அண்டார்டிகா முற்றிலும் பனிப்பாறைகளால் ஆனது. இங்கு மைனஸ் 9 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதால் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இங்கு இல்லை.

ஆராய்ச்சிகள்
இருந்தாலும், பல்வேறு நாடுகளின் ஆராய்ச்சி மையங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. அதில் ஆராய்ச்சியாளர்கள் தங்கியிருந்து தங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள பிரிட்டிஷ் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் பிரிட்டனைச் சேர்ந்த டாம் சில்வெஸ்டர் மற்றும் ஜூலி பவ் ஆகிய இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

வித்தியாச திருமணம்
அதன்படி தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் செய்து கொள்ள விரும்பியது இந்த ஜோடி. அண்டார்டிக் கண்டத்தின் மேற்கில் இருக்கும் அடேய்லயீட் தீவில் உள்ள ரோதரா ஆராய்ச்சி நிலையத்தில் உறைய வைக்கும் குளிரில் இந்த வார இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த சிறப்பு மிக்க திருமணத்தை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பால் சாம்வெஸ் நடத்தி வைக்க இருக்கிறார்.

திருமண விருந்தும்...
திருமண வைபோகத்தில் ஷாம்பெயினுடன் கூடிய காலை உணவும், இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆனால், சிறு குறையாக மணமக்களின் பெற்றோர்களோ, உறவினர்களோ திருமணத்தில் கலந்து கொள்ள முடியாது என்பது தான் வருத்தம் தரக்கூடிய விஷயமாக உள்ளது.
ஒருவரை ஒருவரை கவருவதற்காக வழக்கமாக "ஐஸ்" வைப்பார்கள்.. இவர்கள் ஐஸ் கட்டிகளுக்கு மத்தியில் கல்யாணம் செய்யயப் போகிறார்கள்!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications