சுவிட்சர்லாந்தில் ஆடிப்பூரம்... ஞானலிங்கேஸ்வரத்தில் அன்னைக்கு வளைகாப்பு
பேர்ன்: ஞானலிங்கேச்சுரத்தில் நடைபெற்ற கடகத் திங்கள் ஆடிப்பூர பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற்றனர். அன்னைக்கு சீர் கொண்டு வந்து வளைகாப்பு நடத்தப்பட்டப்பட்டது.
ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பூரம் விழா தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்னர் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது. அன்னைக்கு சீர் கொண்டு வந்து வளைகாப்பு நடத்தினர்.
இதே போல சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில் 05. 08. 2016 அன்று ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரத்தில் கடகத்திங்கள் திருக்கணைப் பெருவிழா (ஆடிப் பூரம்) மிகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
108 திருச்சங்குத் திருமுழுக்கு எம்பெருமானிற்கும் ஞானாம்பிகைத் தாய்கும் அடியார்கள் திருக்கரங்களால் ஆற்றப்பட்டது.

ஞானாம்பிகை
சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து அன்னைக்கு அன்னையர்கள் சீர்எடுத்துவர விரைல மலலர் குழல் வல்லி, மறைமலர் பதலவல்லி, கற்பகவல்லி ஞானாம்பிகைக்கு இறை திருமஞ்சள் நீராட்டுப்பெருவிழா நடைபெற்றது.

வளைகாப்பு
உலக உயிர்கள் யாவற்றையும் படைத்துக் காக்த்துக் கரந்து விளையாடும் உலகாண்ட நாயகிக்கு இளந்தமிழ்ச் செல்வங்கள் ஆலவட்டம் வீச, மஞ்சள்காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடைபெற்று வளையல் அணிவிக்கப்பட்டது.

காந்திமதியாக காட்சி
அண்டத்தையும் விண்டத்தையும் படைத்தருளும் அன்னை இன்று சுவிட்சர்லாந்து நாட்டில் நெல்லையப்பர் ஒரு பாகமான காந்திமதித் தாயாக அருட்காடச்சி அளித்தாள். பெண் பக்தர்கள் அம்மன் சப்பரத்தை தாங்கி வலம் வந்தனர்.

இறைவன் அருள்
வழிபாடுகளைத் தொடர்ந்து, லவுசான் மாநகரில் இருந்து வருகை தந்திருந்த இளந்தமிழ்ச் செல்வியின் வீணை இசை நிகழ்வு கலைமகள் அருள்பொழிய இனிதே நடந்தேறிற்று. நிறைவில் அடியார்களுக்கு அருளமுது வழங்கி மகேச்சுர வழிபாட்டுடன் திருநாள் நிறைவுற்றது.












Click it and Unblock the Notifications