லிபியா அகதிகள் முகாம் மீதான தாக்குதல்.! ஐநா கடும் கண்டனம்.. நியாயமான விசாரணைக்கு அழைப்பு
தஜோரா: லிபியா நாட்டில் அகதிகள் முகாம் மீது நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதல் சம்பவத்திற்கு, ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஒரு சுதந்திரமான இடையூறு இல்லாத விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளுக்கும் - கலீஃபா ஹப்தார் தலைமையிலான லிபிய தேசிய ராணுவம் படையினருக்கும் கடும் போர் நடந்து வருகிறது.

இரு தரப்பினரும் தீவிர துப்பாக்கி சண்டை மற்றும் வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். லிபிய தலைநகர் திரிபோலியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில், கிளர்ச்சி படையினர் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளில் இருந்து முறையான ஆவணமின்றி குடியேற, கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் முக்கிய இடமாக லிபியா உள்ளது.எதியோப்பியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு குடிபெயர்ந்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் லிபிய தலைநகர் திரிபோலி அருகே உள்ள தஜோரா என்ற இடத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது திடீர் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அகதிகள் முகாமிலிருந்த 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய திரிப்போலிக்கு கிழக்கே 15 கி.மீ தொலைவில் மத்திய தரைக்கடல் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தஜோராவில் நடைபெற்ற இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலீஃபா ஹப்தார் தலைமையிலான லிபியதேசிய ராணுவம் படையே இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு உலகநாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒன்றுமறியாத அப்பாவி அகதிகள் மீது நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் போர்க்குற்றம் என்றே கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள லிபிய தேசிய ராணுவ செய்தி தொடர்பாளரான ஜெனரல் கலீத் எல்-மஹ்ஜூப், எங்களது இலக்கு தஜோரா சுற்றுவட்டாரத்தில் இருந்த எதிரிகள் தான். அவர்களை குறி வைத்து தாக்கவே உத்தரவிடப்பட்டது. அகதிகள் முகாமை தாக்க உத்தரவிடவில்லை என கூறியுள்ளார்.
லிபிய வான்வழி தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ், கொடூரம் மற்றும் மூர்க்கத்தனமான இந்த வான்வழி தாக்குதல் குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அகதிகள் முகாம் மீதான தாக்குதல் குறித்து கருத்து கூறியுள்ள ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இரக்கமற்ற தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications