இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. ஜப்பானை தொடர்ந்து நேபாளம் போட்ட திடீர் தடை.. ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

நேபாளம்: ஜப்பானை தொடர்ந்து, அண்டை நாடான நேபாளமும் இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதி செய்ய திடீர் தடை போட்டுள்ளது. இந்த தடையின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நம் நாட்டின் மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதியாகி வருகின்றன. அந்த வகையில் அண்டை நாடான நேபாளத்துக்கும் நம் நாட்டில் இருந்து மாம்பழம் ஏற்றுமதியாகி வருகிறது.

after-japan-nepal-bans-import-of-indian-mangoes

நம் நாட்டில் இருந்து அதிகமாக மாம்பழங்கள் ஏற்றுமதியாகும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் டன் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன்பிறகு நேபாளத்தில் மாம்பழ உற்பத்தி அதிகரித்தது.

இதனால் நம் நாட்டில் இருந்து நேபாளத்துக்கு செல்லும் மாம்பழ ஏற்றுமதி சரிவை சந்தித்தது. இருப்பினும் கூட நம் நாட்டில் இருந்து அதிகமான மாம்பழங்கள் ஏற்றுமதியாகும் நாடுகளின் பட்டியலில் டாப் 10ல் நேபாளம் உள்ளது. கடந்த 2024-25ம் ஆண்டில் நம் நாட்டில் இருந்து நேபாளத்துக்கு 3,300 டன் மாம்பழம் ஏற்றுமதி செய்ப்பட்டது.

அதன்படி பார்த்தால் இந்தியாவின் மொத்த மாம்பழ ஏற்றுமதியில் 10 சதவீதம் நேபாளத்துக்கு செல்கிறது. இந்நிலையில் தான் தற்போது நேபாளம் நம் நாட்டில் இருந்து மாம்பழத்துக்கு திடீரென்று தடை போட்டுள்ளது. நம் நாட்டில் அதிகப்படியான பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்தி மாம்பழம் உற்பத்தி செய்யப்பட்டதாக கூறி நேபாளம் இந்த தடையை விதித்துள்ளது. நம் நாட்டில் இருந்து நேபாளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மாம்பழங்கள் எல்லையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேபாளம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அரசு விதித்துள்ளது.

இந்த தடையால் இந்தியாவின் புகழ்பெற்ற அல்போன்சா (Alphonso), தசேரி (Dasheri), சவுசா(Chausa), கேசர் (Kesar), லங்ரா (Langra) மற்றும் பங்கனப்பள்ளி (Banganapalli) உள்ளிட்ட ரகங்களின் நேபாள ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. முன்னதாக கடந்த மாதம் ஜப்பானும் நம் நாட்டின் மாம்பழத்துக்கு தடை விதித்தது. மாம்பழங்களில் பூச்சி கட்டுப்பாட்டு நடைமுறையில் குறைபாடு உள்ளதாக கூறி ஜப்பான் தடை போட்ட நிலையில் தற்போது நேபாளம் தடை விதித்துள்ளது.

உலகிலேயே அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா (ஆண்டுக்கு சுமார் 28 மில்லியன் மெட்ரிக் டன்). ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிக லாபத்தைத் தரும். ஆனால் தற்போது அடுத்தடுத்து வெளிநாடுகளில் மாம்பழங்களுக்கு தடை விதிக்கப்படுவது விவசாயிகளையும், இந்திய வர்த்தகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+