இந்தியாவை அழித்து இந்துக்களை கொல்ல அல்லாஹ் பாகிஸ்தானியர்களை பணித்துள்ளார்: இஸ்லாமிய தலைவர்
இஸ்லாமாபாத்: இந்தியாவை அழித்து இந்துக்களை கொல்ல அல்லாஹ் பாகிஸ்தானியர்களுக்கு உரிமை அளித்துள்ளார் என பிரபல இஸ்லாமிய தலைவரும், முன்னாள் வங்கி ஊழியருமான இர்பான் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிறந்து கனடாவில் வசிக்கும் பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான தாரக் பத்தாஹ் ஞாயிற்றுக்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய தலைவரும், முன்னாள் வங்கி ஊழியருமான இர்பான் உல் ஹக் உரையாற்றுகிறார். 2011ம் ஆண்டு அவர் உரையாற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

இந்தியா
இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க அல்லாஹ் பாகிஸ்தானியர்களுக்கு உரிமை அளித்துள்ளார். இதனால் பாகிஸ்தானியர்கள் தங்களை அதிர்ஷ்டசாலிகள் என்றே கருத வேண்டும்.

சிலை வழிபாடு
சிலை வழிபாட்டு வழக்கம் அரபு நாடுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் நபிகள் நாயகத்திற்கு குறிப்பிட்ட காலம் மட்டுமே அளித்ததால் அவர் இறந்துவிட்டார்.
நபிகள் நாயகத்தின் பணி அவரது ஆயுட்காலத்தில் முடிந்துவிடவில்லை. அரபு நாடுகளுக்கு வெளியே சிலை வழிபாட்டை ஒழிக்கும் வேலையை செய்ய வேண்டி உள்ளது.

நபிகள் நாயகம்
நபிகள் நாயகம் தனது இறுதிநாட்களில் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதாவது இந்தியாவில் போர் ஒன்று நடக்கும். அதற்கு பெயர் கஸ்வா இ இந்து என்று நபிகள் நாயகம் தெரிவித்தார்.

போர்
இந்தியாவுக்கு எதிரான போரில் கலந்து கொள்ளும் முஸ்லீம்களுக்கு சகாபாக்களின் நிலை கிடைக்கும். இந்தியாவுக்கு எதிரான இந்த ஜிஹாத்தில் கலந்து கொள்பவர்கள் இந்துக்களை கொன்று, பிறரை சிறை பிடிப்பார்கள். அவர்களுக்கு இந்தியாவில் வெற்றி கிடைக்கும். நபிகள் நாயகம் இந்த வார்த்தைகளை கூறிய நாளில் தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது.
பாகிஸ்தான்
அந்த நாளில் தான் பாகிஸ்தானில் வசிக்கும் மக்கள் இந்தியாவில் சிலை வழிபாட்டை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கல்லால் செய்த சிலைகளை இந்தியாவில் தான் வழிபடுகிறார்கள். வேறு எங்கும் இல்லை.












Click it and Unblock the Notifications