110 பேர் பலி.. மற்றொரு நிலநடுக்கத்தால் அலறும் சீனா.. ஏராளமான கட்டடங்கள் சேதம்.. மீட்பு பணி தீவிரம்
பெய்ஜிங்: சீனாவில் 6.2 என்ற ரிக்டர் அளவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் அடுத்ததாக 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் சீனாவில் வசிக்கும் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.
நம் அண்டை நாடான சீனாவின் வடமேற்கு பகுதிகள் என்பது மலை பிரதேசமாக உள்ளது. இங்கு தான் கன்சு மற்றும் கிங்காய் உள்ளிட்ட மாகாணங்கள் உள்ளன. இந்நிலையில் தான் நேற்று இரவு 11.59 மணிக்கு திடீரென்று அங்குள்ள கட்டடங்கள் குலுங்கி உள்ளன.

இதையடுத்து இரவில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகளில் தூங்கியவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அப்போது சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது தான் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதும், 100க்கும் அதிகமானவர்கள் கட்டடங்களில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மீட்பு பணிகள் தொடங்கின. கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணி என்பது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தான் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதாவது கிங்காய் மகாணத்தின் எல்லை பகுதியான ஹைதாங் எனும் இடத்தில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கி உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக பதிவாகி உள்ளது. இதில் கன்சு மாகாணம் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில் கிங்காய் மாகாணமும் பாதிப்பை சந்தித்துள்ளது.
மேலும் இன்று காலை 7.50 மணி நிலவரப்படி கன்சு மகாணத்தில் மட்டும் 105 பேர் பலியாகி இருப்பதும், 370 பேர் படுகாயமடைந்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் 4,700 வீடுகள் இடிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மாறாக கிங்காய் மகாணத்தில் 11 பேர் வரை இறந்தது தெரியவந்தது. இதன்மூலம் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 116 என உயர்ந்தது.
இந்த 2 மாகாணங்களில் மீட்பு பணி என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் சின்ஜியாங் பகுதியில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியான சின்ஜியாங் பகுதியில் இந்த நிலநடுக்கம் 5.5 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. அங்கு ஏற்பட்ட சேதபாதிப்புகள் குறித்த விபரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இப்படி தொடர்ச்சியான நிலநடுக்கத்தால் சீனா மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications