பாகிஸ்தான் அதிபராகும் அசீம் முனீர்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் முக்கிய சந்திப்பு.. பின்னணி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய அதிபராக ராணுவ தளபதி அசீம் முனீர் பதவியேற்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் திடீரென்று அசீம் முனீர், பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்தார். அதன்பிறகு அதிபர் மாளிகைக்கு சென்ற ஷெபாஸ் ஷெரீப், அதிபர் ஆசிப் அலி சர்தாரியை சந்தித்து பேசி உள்ள நிலையில் அதிபர் மாற்றம் நிகழ உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக அசீம் முனீர் உள்ளார். சமீபத்தில் நம் நாட்டுடன் பாகிஸ்தான் மோதியது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு நம் நாடு பலத்த அடி கொடுத்தது.

இதையடுத்து பாகிஸ்தான் மொத்தமாக நம்மிடம் சரணடைந்தது. பாகிஸ்தான் ராணுவத்தால் நமக்கு பதிலடி கொடுக்க முடியவில்லை. அந்த நாடு நம்மை தாக்க எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.
இதன்மூலம் நம் நாட்டை எதிர்கொள்வதில் முற்றிலுமாக பாகிஸ்தான் ராணுவம் தோல்வியடைந்தது. ஆனாலும் கூட பாகிஸ்தான் அரசு அந்த நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு ஃபீல்ட் மார்ஷல் பட்டத்தை வழங்கியது. இந்தியாவுடன் போரை சிறந்த முறையில் கையாண்டு பதிலடி கொடுத்ததாக கூறி அந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றில் ஒருவர் ஃபீல்ட் மார்ஷல் பதவியை பெறுவது இது 2வது முறையாகும்.
இந்த நடவடிக்கை என்பது பாகிஸ்தானில் அசீம் முனீருக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில் தான் இந்த மாதம் முதலில் இருந்த ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அது என்னவென்றால் பாகிஸ்தான் அதிபராக அசீம் முனீர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. தற்போது பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி ஜர்தாரி அதிபராக உள்ளார். இவருக்கு மாற்றாக அசீம் முனீர் அதிபராக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பின் பேரில் அசீம் முனீர் பிரதமர் மாளிகை சென்று அவரை சந்தித்து பேசினார். இருவரும் விவாதித்தனர். அதுபற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சந்திப்புக்கு பிறகு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் அதிபர் மாளிகைக்கு சென்று ஆசிப் அலி ஜர்தாரியை சந்தித்தார். இதன் பின்னணியில் அதிபர் மாற்ற நடவடிக்கை தான் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் அரசியல் விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
தற்போது பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருக்கும் அசீம் முனீரின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் அவர் தனது அதிகாரத்தை தக்க வைக்க நினைக்கிறார். இதனால் அதிபர் பதவியை எட்டிப்பிடிக்க திட்டமிட்டு அதற்கான வேலையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். மேலும் பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருப்பவர்கள் அதிபர் பதவியை எட்டிப்பிடிப்பது ஒன்றும் புதிது இல்லை. இதற்கு முன்பு சிலர் ஆட்சியை கவிழ்த்து அதிபராகி நாட்டை வழிநடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications