சீனாவை சுத்துப்போட்ட கனமழை! வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி.. 19 பேர் மாயம்! தேடுதல் பணி தீவிரம்
பெய்ஜிங்: வடக்கு சீனாவில் பெய்த கனமழை காரணமாக சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மட்டுமல்லாது கோடிக்கணக்கான அளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.
டோக்சுரி சூறாவளி காரணமாக வட சீனம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பெய்ஜிங்கிலும், ஹெபெய், தியான்ஜின் மற்றும் கிழக்கு ஷான்சியிலும் இடைவிடாமல் பெய்த மழையால் அனைத்து இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது. சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை மதியம் 1 மணி வரை இந்த பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. அந்நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி இப்பகுதிகளில் சுமார் 580.9 மி.மீ வரை மழை பொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போது பெய்த மழையின் அளவு வெறும் 25 மி.மீதான். ஆனால் சீனாவின் தலைநகரில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 196.9 மி.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இரண்டு பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை 31,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
பெய்ஜிங்கின் ஃபெங்டாய் மாவட்டத்தை ஹெபேயில் உள்ள ஷாசெங்குடன் இணைக்கும் 105 கி.மீ ரயில் பாதை முழுவதும் மழை நீரில் மூழ்கி உள்ளதால் ரயில் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல 4,000 கட்டுமான பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது. உணவு பொருட்களை பொறுத்த அளவில் சோள பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழை வெள்ளம் காரணமாக சுமார் ரூ.550 அளவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல இந்த வெள்ளத்தால் சுமார் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 19 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "நாங்கள் இதுபோன்ற பேய் மழையை இதற்கு முன்னர் பார்த்ததில்லை. தொடர்ந்து 40 மணி நேரம் வரை மழை பெய்திருக்கிறது. இந்த விடாத மழை எங்களை பெரிதும் பாதித்துவிட்டது. எங்களுடைய கார்கள், வீட்டிலிருந்த பொருட்கள் என அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. எங்கள் வாழ்நாளில் இதுபோன்ற பேய் மழையை நாங்கள் பார்த்ததில்லை" என்று 20 வயது இளைஞர் ஒருவர் கூறியுள்ளார்.
மீட்பு பணிகள் குறித்து அந்நாட்டின் அதிபர் உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகளுக்காக ரூ.126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகளும் ரயில் நிலையங்களும் மழை நீரில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சீனா பார்த்த இரண்டாவது வெள்ளம் இது. கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் பெய்த கனமழை இதேபோல பெரும் வெள்ளத்தை உருவாக்கியது. இதனால் சுமார் 79 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications