விடைபெற்றார் ஷேன் வார்னே.. மாரடைப்பால் காலமானதாக தகவல்.. கண்ணீர் விடும் கிரிக்கெட் ரசிகர்கள்
மெர்ல்போர்ன்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது மாயாஜால பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்த ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவானான வீரர் ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக காலமானார்.
Recommended Video
ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களில் மிக முக்கியமானவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே.
தனது ரிஸ்ட்ஸ்பின்னர் மூலம் பல எதிரணி வீரர்களையும் பல ஜாம்பவான்களையும் களத்தில் தெரிக்கவிட்டவர். சச்சின் , லாரா, சேவாக் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களையே தனது அபார சுழற்பந்து வீச்சால் தடுமாற வைத்தவர்.
சசிகலா-ஓ.ராஜா திடீர் சந்திப்பு..இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்கிறாரா ஓபிஎஸ்? உச்சகட்ட பரபரப்பில் அதிமுக
கிரிக்கெட் ஜாம்பவான்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷேன்வார்ன். டெஸ்ட் போட்டியில் மட்டும் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போதுவரை பல பேட்ஸ்மேன்களின் கனவில் சிம்ம சொப்பனமாக திகழ்பவர். 1992 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடினார்
சுழல் ஜாலம்
வார்ன், தனது சூழல் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். ஸ்பின்னர்கள் என்றாலே ஆல் டைம் பெஸ்ட் வரிசையில் ஷேன்வார்னேவுக்கு தனி இடம் உண்டு. இவ்வளவு புகழ் இருந்தபோதும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வார்னேவுக்கு புதிதல்ல. மைதானத்தில் சிகரெட் பிடித்தது , போக்குவரத்து விதிகளை மீறியதற்காக வாகனம் ஓட்ட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது என அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியவர் வார்ன்.
திடீர் விபத்து
தற்போது கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனை செய்துவந்த வார்னே, ஆஷஸ் தொடரில் கலந்து கொண்டு பல சுவராசியமான ஆட்ட நுணுக்கங்களை விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். ஷேன் வார்னேவும் அவரது மகன் விபத்தில் சிக்கிய நிலையில் அதிலிருந்து மீண்டு வந்து தனது மன உறுதியை வெளிக்காட்டினர்.
திடீர் மரணம்
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்டைம் பேவரிட் வீரரான ஷேன் வார்னே திடீரென மரணம் அடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 52 வயதான ஷேன் வார்னே தாய்லாந்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.