மலேசியா அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கியது- 66 பேர் பலி?
Subscribe to Oneindia Tamil

இந்தோனேசியாவில் இருந்து சட்டவிரோதமாக மலேசியா செல்வதற்காக 97 பேருடன் அகதிகள் படகு ஒன்று புறப்பட்டது. அதில் 90 பேர் அகதிகள். இதில் பெண்கள், கைக் குழந்தைகளும் அடங்குவர்.
இந்த படகு மலேசியாவில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் திடீரென கடலில் மூழ்கியது. இதைத் தொடர்ந்து கடலில் மூழ்கியோரை மீட்கும் பணியில் மலேசியா ஈடுபட்டது.
இதுவரை 31 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 66 பேரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications