ஐஎம்எஃப் தலைமையை மாற்ற கோரும் பிரிக்ஸ்! இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் இன்று பிரிக்ஸ் (BRICS) மாநாடு தொடங்குகிறது. இதில் ஐஎம்எஃப் தலைமைக்கு மாற்று வேண்டும் என்று உறுப்பு நாடுகள் வலியுறுத்த இருக்கின்றன. இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுந்திருக்கிறது.
பிரிக்ஸ் நாடுகள் சமீப காலமாக பொருளாதாரத்திலும் சரி மற்ற விவகாரங்களிலும் சரி வேகமான வளர்ச்சியை எட்டி வருகின்றன. ஒரு காலத்தில் ஜி-7 நாடுகளின் மாநாடுதான் மிகுந்த கவனம் பெற்றிருந்தது. ஆனால், அந்த இடத்தை தற்போது பிரிக்ஸ் பிடித்திருக்கிறது. உலக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகளில் பங்களிப்பு என பிரிக்ஸ் வளர்ந்து வந்தாலும் இதனை மேற்கு நாடுகள் அங்கீகரிக்காமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கும் பிரிக்ஸ் கூட்டத்தில் மிக முக்கிய தீர்மானங்கள் போடப்பட இருக்கின்றன. அதாவது, சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும், குறிப்பாக, வாக்களிக்கும் உரிமைகளை மறுபகிர்வு செய்வது மற்றும் ஐரோப்பிய நிர்வாகத்தின் தலைமைப் பதவியை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை செய்யப்பட வேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்பட்டு அது குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
ஐஎம்எஃப்-ஐ பொறுத்தவரை, அதன் தலைவர் பதவிக்கு ஐரோப்பாவை சேர்ந்தவர்கள்தான் காலங்காலமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இது எழுதப்படாத விதியாகவே தொடர்கிறது. உண்மையலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்பை விட தற்போத வலுவிழந்துள்ளன. பிரிக்ஸ் நாடுகள் பேரெழுச்சி பெற்று வருகின்றன. அப்படி இருக்கையில், ஏன் ஆசியாவிலிருந்து ஒருவரை தலைவராக நியமிக்க கூடாது என்பதுதான் தற்போதைய கேள்வி.
மட்டுமல்லாது திறமைனயின் அடிப்படையில் தலைவர் பதவிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் பிரிக்ஸ் வலியுறுத்துகிறது. அதேபோல IMF இல் உறுப்பு நாடுகளின் பங்களிப்புகள் மற்றும் வாக்குரிமைகளை வரையறுக்கும் ஒதுக்கீட்டு முறையை சீர்திருத்த BRICS நாடுகள் விரும்புகின்றன.
இந்த பிரச்சனை குறித்த எடுக்கப்படும் முடிவுகளுக்கு இந்திய என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது? என்பது கேள்விக்குறி. ஏனெனில் இந்தியா தற்போது அமெரிக்கா சார்பாக மாறி வருகிறது. ஐஎம்எஃப் அமெரிக்காவின் கன்ட்ரோலில் இருக்கிறது. எனவேதான் இந்தியாவின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம் இந்த மாநாட்டுக்கு சீனா மற்றும் ரஷ்ய அதிபர்கள் பங்கேற்க மாட்டார்கள். சீனா அதிபர் சமீபத்தில்தான் பிரிக்ஸ் தலைவர்களை சந்திருந்ததாகவும், எனவே இந்த முறை, அவருக்க பதிலாக சீனாவின் பிரதமர் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதின் கதை வேறு. உக்ரைன் போர் காரணமாக அவர் மீது சர்வதேச நீதிமன்றம் கைது கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறது.
சர்வதேச நீதிமன்றங்களை ஏற்றுக்கொண்ட நாடுகளுக்கு இவர் நுழையும் பட்சத்தில் கைது செய்யப்படலாம். பிரிக்ஸ் மாநாடு நடக்கும் பிரேசில் சர்வதேச நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவேதான் பிரேசிலுக்கு புதின் வருவதை தவிர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications