கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி: இன ரீதியான தாக்குதலா?
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள ஃபிரஸ்னோவில், இன ரீதியான தாக்குதல் என்று சந்தேகிக்கப்பட்ட சம்பவத்தில், ஒரு கறுப்பின நபர் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று வெள்ளை இன நபர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமையன்று கோரி அலி முஹம்மத் என்ற அந்த நபர் தனது துப்பாக்கியால் 90 வினாடிகளில் 16 முறைகள் சுட்டதாக தலைமை போலீஸ் அதிகாரி ஜெர்ரி டயர் தெரிவித்தார்.
அரபி மொழியில் ''கடவுள் மிகப் பெரியவர்'' என்று குரல் எழுப்பிய அந்த தாக்குதல்தாரியை போலீசார் கைது செய்தனர்.
ஆனால், இது வெறுப்புணர்வால் நடந்த குற்றம் என்றும், பயங்கரவாத சம்பவம் அல்ல என்றுதான் நம்புவதாக டயர் குறிப்பிட்டார்.
கடந்த வாரத்தில் ஒரு நெடுஞ்சாலை உணவகத்துக்கு வெளியே ஒரு பாதுகாவலர் கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் முஹம்மத் தேடப்பட்டு வந்தார்.
சமூக வலைதளத்தில் வெள்ளை இன மக்களை தான் வெறுப்பதாக குறிப்பிட்ட ஆப்ரிக்க அமெரிக்கரான தாக்குதல்தாரி, அரசுக்கு எதிரான கருத்துக்களையும் வெளிப்படுத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கபப்ட்ட நான்கு பேருமே வெள்ளை இன நபர்கள்தான். இவர்களில் ஒருவர் காரில் அமர்ந்திருக்கும் போது சுடப்பட்டார்.
''தன்னால் எத்தனை பேரை கொல்ல முடியுமோ, அத்தனை பேரை கொல்ல அவர் விரும்பியுள்ளார். அது தான் நடந்த சம்பவத்தை எடுத்துக் காட்டுகிறது'' என்று டயர் தெரிவித்தார்.
மிகப் பெரிய கைத்துப்பாக்கியை ஒருவர் எடுத்துச் சென்றதை தாங்கள் கண்டதாகவும், அவ்வப்போது துப்பாக்கியில் தோட்டாக்களை அவர் மீண்டும் நிரப்பியதாகவும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்திகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம்:
கோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்?
சசிகலா குடும்பத்தினரை கட்சி, ஆட்சியிலிருந்து ஒதுக்க முடிவு: அ.தி.மு.க. அமைச்சர்கள் அறிவிப்பு
விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications