மாபெரும் போர் பயிற்சி.. தயார் நிலையில் வீரர்கள்.. பேச்சுவார்த்தைக்கு பின்பும் வேலையை காட்டிய சீனா!
பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த பிஎல்ஏ ராணுவ படை நேற்று மிகப்பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. சீனாவுடன் இந்தியா எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையிலும் கூட சீனா இப்படி படைகளை வைத்து பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது.
Recommended Video
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்புதான் இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டது. ஆனால் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அமைதிக்கான முதல் படியாக இந்த மீட்டிங் பார்க்கப்பட்டது.

புதிய சர்ச்சை
இந்த நிலையில் புதிய திருப்பமாக சீனாவை சேர்ந்த பிஎல்ஏ ராணுவ படை நேற்று மிகப்பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. People's Liberation Army எனப்படும் பிஎல்ஏ ராணுவ படைத்தான் சீனாவின் முன்னணி ராணுவ பிரிவு ஆகும். இவர்கள் நேற்று மத்திய சீனாவில் பயிற்சி மேற்கொண்டனர். பல்லாயிரம் வீரர்கள் ஒன்றாக சேர்ந்து பயிற்சியில் ஈடுப்பட்டனர்.

சீனாவின் வேலை
சீனாவுடன் இந்தியா எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையிலும் கூட சீனா இப்படி படைகளை வைத்து பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. மத்திய சீனாவில் இருந்து லடாக் எல்லைக்கு எவ்வளவு வேகத்தில் படைகளை அனுப்பலாம் என்பதை ஆராயவும், படைகள் தயாராக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவும் சீனா இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

மிகப்பெரியது
சீனா சமீப நாட்களில் செய்த மிகப்பெரிய பயிற்சி இதுதான் என்று கூறுகிறார்கள். சீனா இந்த பயிற்சியை சரியாக எங்கே செய்தது என்று விவரங்கள் வெளியாகவில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக படைகளை அனுப்பி உள்ளனர். அவர்கள் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க இப்படி செய்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக மெசேஜாக பார்க்கப்படுகிறது.

எப்படி எல்லாம் சென்றனர்
இந்த சீன வீரர்கள் சீனாவின் போர் விமானம், ரயில், பேருந்து என்று பல வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு, எவ்வளவு வேகமாக வீரர்களை இடமாற்றம் செய்ய முடியும் என்று சீனா ராணுவம் கண்டுபிடித்துள்ளது. லடாக்கில் பிரச்சனை வந்தால் உடனடியாக வீரர்களை எல்லைக்கு அனுப்ப வசதியாக சீனா இப்படி சோதனையா செய்துள்ளது. இதில் நவீன ஆயுதங்களையும் இப்படி கொண்டு சென்று இருக்கிறார்கள்.

மிக மோசம்
எல்லை பேச்சுவார்த்தைக்கு பின் லடாக்கில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீனா தனது தயார் நிலை குறித்து சோதனை செய்து வருகிறது. அமைதியை விரும்பும் ஒரு நாடு ஏன் தயார் நிலை குறித்து சோதிக்க வேண்டும். ஏன் படைகளை வேகமாக அனுப்ப முடியுமா என்று ஆராய வேண்டும் என்று புரியவில்லை. இதற்கு இந்தியாவும் விரைவில் தக்க பதிலடியை கொடுக்கும் என்று கூறுகிறார்கள்.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications