இந்தியாவுக்கு எதிராக உயிரி போர்... சீனா பாகிஸ்தான் ஒப்பந்தம்... அதிர வைக்கும் அறிக்கை!!
பீஜிங்: இந்தியாவுக்கு எதிராக உயிரி போர் நடத்துவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தில் சீனாவும், பாகிஸ்தானும் ஈடுபட்டு இருப்பதாக பல்வேறு புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கொரோனா தொற்று வைரஸை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா திணறி வரும்போது வெளியாகி இருக்கும் இந்த செய்தி அதிர்ச்சியை ஏறபடுத்தி உள்ளது.
Recommended Video
சீனாவின் வுகானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியாகி இருப்பதாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் சந்தேகித்து வருகின்றன. இதற்கு சீனா மறுப்பு தெரிவித்து, கண்டனமும் தெரிவித்து வருகிறது. ஆனால், அந்த நாட்டின் மீது ஆஸ்திரேலியா உள்பட 160 நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

சீன வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்து இருந்தார். அமெரிக்க புலனாய்வு அமைப்புகளும் சீனாவின் ஆய்வகத்தில் இருந்துதான் கசிந்துள்ளது என்று கூறி வருகின்றன. நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்னர் சீனாவில் ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பும் ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில், ஆன்டனி கிளான் என்பவர் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அதில், ''சீனாவில் வுகானில் இருக்கும் ஆய்வகமும், பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பும் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளது. இதன்படி திடீரென உருவாகும் நோய்கள், பரவும் நோய்கள் மீதான உயிரியல் கட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்வது என்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின்படி, சர்வதேச சமுதாயத்திடம் இருந்து எழும் கண்டனங்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆந்த்ராக்ஸ் போன்று மண்ணில் இருந்து உருவாகும் ஒரு வகை பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற பாக்டீரியாவை எவ்வாறு தனிமைப்படுத்துவது என்பது குறித்த ஆய்வை இருநாடுகளும் செய்து முடிந்துள்ளன. அதற்கான மண் ஆய்வுகளையும் நடத்தி முடித்துள்ளது. எவ்வாறு இந்த உயிரி திட்டத்திற்கு பாக்டீரியா துணை நிற்கும் என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற பாக்டீரியா குறித்த அனைத்து தகவல்களையும் சீனாவின் வுகான் ஆய்வு மையம் கொடுத்துள்ளது. எவ்வாறு நோய் கிருமிகளை கையாளுவது. தகவல்களை எவ்வாறு பறிமாறிக் கொள்வது என்பது குறித்த பயிற்ச்சிகளை பாகிஸ்தானுக்கு சீனா கொடுத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் சொந்தமாக வைரஸ் டேட்டா மையத்தை உருவாக்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைரஸ்களை கண்டறிதல், எவையெல்லாம் ஆபத்தான நுண்ணுயிர்கள் என்று கண்டறிவது போன்ற பயிற்ச்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications