கிம்மின் அப்பாவுக்கு சிகிச்சை அளித்த சீன மருத்துவர்கள்.. அப்போ அமெரிக்கா சொன்னது உண்மைதானோ?
பெய்ஜிங்: கடந்த 2008ஆம் ஆண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தைக்கு சீன மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது சீன மருத்துவர்கள் குழு வடகொரியா சென்றுள்ளதால் அவர்கள் கிம்மிற்கு சிகிச்சை அளிக்க சென்றிருக்கலாம் என தெரிகிறது.
Recommended Video
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில நாட்களாக பொது வெளியில் தோன்றுவதில்லை. இந்த நிலையில் அவருக்கு கடந்த 12 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இதனிடையே கிம்மின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது. எனினும் இதுகுறித்து வடகொரியா எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

உடல்நிலை
இதுகுறித்து தென்கொரியாவிடம் கேட்டபோது கிம்மின் உடல்நிலை குறித்து அமெரிக்கா கூறுவது போல் அந்நாட்டில் எந்த வழக்கத்துக்கு மாறான செயல்களும் எங்களுக்கு தெரியவில்லை என கூறியது. இந்த நிலையில் வடகொரியாவின் நட்பு நாடான சீனா கிம்மின் உடல்நிலை குறித்து ஆலோசனைகளை வழங்க மருத்துவ நிபுணர்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

வடகொரியா
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச லியாசன் துறையின் அதிகாரி ஒருவரும் அவர்களுடன் வியாழக்கிழமை வடகொரியாவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. லியாசன் துறை என்பது இரு நாடுகளுக்கிடையே உள்ள நட்புறவை வலுபடுத்தும் துறையாகும். இதுகுறித்து சீன நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கேட்டபோது அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.

பரம்பரை நோய்
கிம் ஜாங் உன்னிற்கு கடந்த 2014-ஆம் ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் போனது. அதன் பிறகு புகைப்பழக்கம் மற்றும் கூடுதல் எடையால் அவர் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதய நோய் என்பது கிம் குடும்பத்தின் பரம்பரை நோயாகவே கருதப்படுகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு கிம் ஜாங் உன்னின் தந்தைக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டது.

தென் கொரிய ஊடகங்கள்
அப்போது பிரெஞ்ச் மருத்துவர்களுடன் இணைந்து சீன நாட்டு மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சை அளித்ததாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. தற்போது வடகொரியாவுக்கு சீன மருத்துவக் குழு சென்றுள்ளதை பார்த்தால் உண்மையிலேயே கிம்மின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதா என்ற சந்தேகம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வலுக்கிறது.

உறுதுணையாக இருந்த சீனா
கிம்மின் தந்தை 2011 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்தவுடன் கிம் ஜாங் உன் பதவிக்கு வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் சீனாவுக்கு அவர் 4 முறை சென்றுள்ளார். வடகொரியா அணு ஆயுத சோதனையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போது சீனா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்த போது சீனா அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது.












Click it and Unblock the Notifications