வலை விரிக்கும் சீனா.. வசமாக சிக்கும் தென் அமெரிக்க நாடு? போர் வெடிக்கும் அபாயம்! பதறும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: தென் அமெரிக்காவுக்குள் நுழையச் சீனா ஒரு பக்காவான திட்டத்தை வகுத்துள்ள நிலையில், இது அமெரிக்கா சீனா இடையே மறைமுக போரை உருவாக்கக் கூடும் எனச் சர்வதேச வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த பல காலமாகவே நல்லுறவு இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருவது. அனைவருக்கும் தெரியும்.

China peru US World

இதற்கிடையே சீனா இப்போது செயல்படுத்தும் ஒரு பிளான் சர்வதேச அளவில் மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக இது அமெரிக்காவுக்கு பெரிய சிக்கலைத் தரலாம் என அஞ்சப்படுகிறது.

துறைமுகம்: தென் அமெரிக்காவில் சீனா ஒரு துறைமுகத்தை உருவாக்கி வருகிறது. இத்திட்டத்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என அஞ்சப்படுகிறது.

அதாவது தென் அமெரிக்காவில் அமைந்துள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று பெரு.. முழுக்க முழுக்க சுற்றுலாத் துறையை நம்பி இருக்கும் இந்த நாட்டின் மக்கள்தொகையே வெறும் 3 கோடி தான்.. இங்குள்ள சான்கேய் என்ற நகரில் தான் சீனா இப்போது ஒரு பிரம்மாண்ட துறைமுகத்தை உருவாக்கி வருகிறது.. இந்த ஆண்டு இறுதியில் இந்த துறைமுகத்தைச் சீன அதிபர் ஜி ஜின்பிங் திறந்து வைக்க இருக்கிறார்.

மிக முக்கிய திட்டம்: சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்படும் இந்த துறைமுகம் சீனாவின் மிக முக்கிய திட்டமாகப் பார்க்கப்படுகிறது. தென் அமெரிக்கச் சந்தைக்குள் நுழைய இது சீனாவுக்கு பக்காவான ஒரு வாய்ப்பை தருகிறது. இந்த துறைமுகம் திறக்கப்பட்டால் ஆசியா மற்றும் தென் அமெரிக்கா இடையேயான வர்த்தகம் மேம்படும். மேலும், சீனாவில் இருந்து தென் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் அதிகரிக்கும்.

தென் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரை உள்ள மற்ற துறைமுகங்களால் பெரிய கப்பல்களைக் கையாள முடியாது. ஆனால், இந்த துறைமுகம் 60 அடி ஆழம் இருப்பதால் மெகா கப்பல்களையும் இது ஈஸியாக கையாளும் என்று கூறப்படுகிறது.

மொத்த கண்ட்ரோல் சீனாவிடம்: தென் அமெரிக்காவில் சீனாவின் எழுச்சியைத் தடுக்க அமெரிக்கா தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த துறைமுகம் ஒரு சவாலாக உள்ளது. இதைச் சீனா கட்டுவதால் முக்கிய கட்டுப்பாடுகளும் அவர்கள் வசம் தான் இருக்கும். இதனால் தென் அமெரிக்காவின் வளங்கள் மீதான சீனாவின் பிடி அதிகரிக்கும்.

வெடிக்கும் போர்: அதாவது இயற்கை வளங்களால் நிரம்பி இருக்கும் இந்த பிராந்தியத்தைச் சீனாவால் எளிதாக அணுக முடியும். இதன் மூலம் இங்குள்ள இயற்கை வளங்களைச் சீனாவால் எளிதாக எடுக்க முடியும். இது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சவாலாகவே மாறி இருக்கிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான உறவு மிக மிக மோசமான இருக்கும் நிலையில், இந்த துறைமுகம் அதை மேலும் மோசமாக்கும். குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே இது மறைமுக போரைக் கூட தொடங்கலாம் என அஞ்சப்படுகிறது.

அதேநேரம் பெரு நாடு இது தங்களுக்கு ஆசிய மார்கெட்டை திறந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. பெரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பழம், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை இந்த துறைமுகம் வந்தவுடன் எளிதாக ஆசிய மார்கெட்டிற்கு அனுப்ப முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நினைவிருக்கா: இருப்பினும், இத்திட்டத்தால் முழு பயனையும் சீனாவே அடையும் என் சர்வதேச வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், சரியாகக் கையாளவில்லை என்றால் இந்த நிலைமை பெருவுக்கு மொத்தமாக எதிராக மாறிவிடும் என்றும் அஞ்சப்படுகிறது. ஏனென்றால் இப்போது பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் சீனா இதுபோன்ற திட்டங்களைத் தான் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+