"ஒழுங்கா இருங்க".. பாகிஸ்தானை எச்சரித்த சீனா! அமெரிக்கா போட்ட உத்தரவு.. சம்பவம் செய்த இந்தியா
பெய்ஜிங்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அமெரிக்கா அந்த அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பாகிஸ்தானை சீண்டும் வகையில் பதிலளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
காலம் காலமாக பயங்கரவாதிகளுக்கு தீனி போட்டு வளர்ப்பதையே பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது. உலகம் முழுவதும் பயங்கரவாதிகளை சப்ளை செய்யும் பாகிஸ்தான் நம் நாட்டிலும் பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியது.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 ஆண்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' (ஆர்பிஃஎப்) பொறுப்பேற்றது. பதிலடிக்கு நம் நாடு தயாராகி வந்த நிலையில் அந்த அமைப்பு பின்வாங்கியது. பஹல்காம் தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று அறிவித்தது. ஆனால் உண்மையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தான் 26 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
இந்நிலையில் தான் டிஆர்எஃப் எனும் ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' அமைப்பை அமெரிக்கா தனது பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 18 ம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டது. ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்பு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பாகிஸ்தானுக்கு பின்னடைவைாக பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் இந்த செயலை நம் நாடு வரவேற்றது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவை பாராட்டினார்.
இந்நிலையில் தான் ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' அமைப்பை பயங்கரவாத பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது பற்றி சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ‛‛சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் உறுதியாக எதிர்க்கிறது. ஏப்ரல் 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலை (பஹல்காம் தாக்குதல்) கடுமையாக கண்டிக்கிறது. பிராந்திய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புக்காக சேர்ந்து செயல்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் பெயரை கூறாமல் அவர் பயங்கராதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சீனாவும், பாகிஸ்தானும் நெருங்கிய நட்பு நாடுகள். பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் ராணுவ தளவாடங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை சீனாவிடம் இருந்து வாங்கியது தான். இருநாடுகள் இடையே நல்ல உறவு இருக்கிறது. இருப்பினும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை சீனா கண்டித்தது. ஆனால் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நாம் தாக்கியபோது சீனா அந்த நாட்டுக்கு உதவியதும்.
நம்நாட்டின் ஏவுகணை பாதைகளை கண்டறியந்து முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தகவல் அளித்தது. இப்படியான சூழலில் சீனா இந்த கருத்தை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications