மீண்டும் வந்தால் கஷ்டம்.. வுஹன் திறந்து ஒரே வாரம்.. சீனாவில் கொரோனா 'செகண்ட் வேவ்'.. என்ன நடக்கிறது?
பெய்ஜிங்: சீனாவில் தற்போது மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கிட்டத்தட்ட 6 வாரங்களுக்கு பிறகு சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
Recommended Video
சீனா கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டது.. இந்த வாக்கியம்தான் தற்போது உலகத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆம், கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சீனா தற்போது அதில் இருந்து மீண்டும் வந்த அதே சமயம் உலக நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளது.
பல நாடுகள் சீனாவை நம்பித்தான் தற்போது உள்ளது. சீனா கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால் சீனா முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்பும் முன் அங்கு மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறுகிறார்கள்.

சீனாவின் தற்போதைய நிலை
சீனாவில் தற்போது கொரோனா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் 82,160 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3329 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் 77,663 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு 1156 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு மொத்தமாக 3,341 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 2 பேர் பலியானார்கள். நேற்று புதிதாக 108 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

மிக அதிகம்
சீனாவில் நேற்று 108 பேருக்கு கொரோனா ஏற்பட்டதுதான் கடந்த 39 நாட்களில் மிக அதிகமான எண்ணிக்கை ஆகும். ஆம் கடைசியாக மார்ச் 5ம் தேதி 143 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் இப்போதுதான் அங்கு மூன்று இலக்கங்களில் ஒரே நாளில் கொரோனா ஏற்படுகிறது. அதிலும் கடந்த ஒரு வாரம் முழுக்க தினமும் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டது.

திடீர் அதிகரிப்பு
இந்த நிலையில் சீனாவில் திடீரென்று கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சீனாவில் தற்போது நோய் ஏற்படும் நபர்கள் எல்லாம் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். வெளிநாட்டில் இருந்து சீனா வந்தவர்கள் மூலம் அங்கு கொரோனா பரவுகிறது. நேற்று கொரோனா ஏற்பட்டவர்களில் 99 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிற்கு உள்ளே வந்தவர்
அதேபோல் இந்த 99 பேரில் 49 பேர் ரஷ்யாவை சேர்ந்தவர்கள். இவர்கள் சீனா ரஷ்யா அருகே இருக்கும் ஹெயிலோங்ஜியாங் பகுதி மூலமாக சீனாவிற்குள் நுழைந்து இருக்கிறார்கள். இவர்கள் மூலம் சீனாவிற்கு உள்ளே பொதுமக்கள் 7 பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. இதனால் சீனாவில் தற்போது செகண்ட் வேவ் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேள்வி சந்தேகம்
பொதுவாக ஒரு இடத்தில் ஒரு நோய் தாக்கினால், அந்த நோய் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தீவிரமாக இருக்கும். அதன்பின் திடீர் என்று வேகம் குறைந்து செயல் இழக்கும். இப்படி ஒரு செயல் இழந்த அல்லது குணப்படுத்தப்பட்ட ஒரு நோய் மீண்டும் தோன்றினால், மீண்டும் வேகம் எடுத்தால் அதுதான் செகண்ட் வேவ். அதாவது இரண்டாவது அலை. முதலில் தோன்றிய வைரஸ் மீண்டும் வந்தால் அதை செகண்ட் வேவ் என்று கூறுவார்கள்.

மிக கஷ்டம்
இப்படி செகண்ட் வேவ் கொரோனா வைரஸ் தாக்கினால் அது மிகவும் கடினம் ஆகும். அதை கட்டுப்படுத்துவது கடினமான செயல் ஆகும். மீண்டும் கொரோனா ஏற்பட்டால் அது முன்பை விட வேகமாக வளரும். முன்பை விட தீவிரமாக கொரோனா ஏற்படும். அங்கு வுஹன் நகரம் திறந்து ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் இந்த இரண்டாம் அலை தாக்குதலை முடிந்த அளவு தடுக்க வேண்டும். இல்லையென்றால் கஷ்டம் என்று கூறுகிறார்கள்.

சீனாவில் செகண்ட் வேவ்
தற்போது சீனாவில் இதேதான் நடக்கிறது. தற்போது சீனாவில் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் இது ஒருவேளை செகண்ட் வேவாக இருக்குமோ என்று மக்கள் அச்சம் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். அதே சமயம் சீனாவில் கொரோனா பாதிக்கும் நபர்களில் 60% பேருக்கு அதன் அறிகுறி இல்லை. அதாவது அறிகுறி இல்லாத கொரோனா ஆகும் இது.

அறிகுறி இல்லாமல் தோன்றுகிறது
பொதுவாக கொரோனா வந்தால் உடனே இருமல், காய்ச்சல், மூச்சு விட சிரமம் உள்ளிட்ட அறிகுறி ஏற்படுவதுதான் வழக்கம். ஆனால் சீனாவில் சமீப நாட்களாக அறிகுறி எதுவும் இல்லாமலே கொரோனா ஏற்பட தொடங்கி உள்ளது. இதுதான் கொரோனாவின் Asymtomatic குணம் ஆகும். கொரோனாவின் இந்த அறிகுறியற்ற தன்மையால் அதை கண்டுபிடிப்பது கடினம். இது கொரோனா பரவலை மேலும் தீவிரப்படுத்தும். பலர் இதனால் வேகமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications