கொரோனா எப்படி பரவியது? எத்தனை நாடுகள் பாதித்துள்ளது.. பின்னணி என்ன? ஹு வெளியிட்ட அறிக்கை!
நியூயார்க்: உலகம் முழுக்க மொத்தம் 95,265 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், 3281 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருப்பதற்காக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்த நிலையில் இந்த வைரஸ் தொடர்பாக உலக சுகாதார மையம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதானாம் கேப்ரியேசஸ் வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 143 பேருக்கு மட்டுமே வைரஸ் ஏற்பட்டுள்ளது. 95,265 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், 3281 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ளனர்.
சீனாவிற்கு வெளியே நேற்று மட்டும் 33 நாடுகளில் 2055 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதிலும் இதில் 80% பாதிப்பு மூன்று நாடுகளில் ஏற்பட்டுள்ளது. கொரியாவில் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சரியாகி வருகிறது.
அங்கு புதிதாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்போது புதிதாக தாக்குதலுக்கு உள்ளாகலாம் நபர்கள் கூட ஏற்கனவே நோய் ஏற்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டவர்கள்தான்.

அதே சமயம் சில நாடுகளில் பெரிய அதிக அளவில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. 115 நாடாவுகளில் இதுவரை நோய் தாக்குதலை இல்லை. 21 நாடுகளில் ஒரே ஒரு நபருக்கு மட்டும் நோய் தாக்குதல் உள்ளது. ஏற்கனேவே நோய் தாக்குதலுக்கு உள்ளான 5 நாடுகளில் கடந்த 14 நாட்களாக இந்த நோய் தாக்குதல் ஏற்படவில்லை.
இந்த வைரஸ் எப்படி எல்லாம் பரவும் என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது. அதன்படி இந்த வைரஸ் முதற்கட்டமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு நீர் குமிழிகள் மூலம் பரவும். அதாவது இருமல், தும்மலின் போது வெளியாகும் நீர் குமிழிகள் மூலம் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவும். அதேபோல் கை குலுக்குதல் மூலம் கூட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை எதிர்கொள்வதை விட, அது தொடர்பான வதந்திகளை எதிர்கொள்வதுதான் மிகவும் கடினமாக இருக்கிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கொரோனாவை தடுக்கவும், எதிர்கொள்ளவும் உலக நாடுகள் பின்வரும் பணிகளை செய்ய வேண்டும்:
- அவசர செயல்பாடுகளை, திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும். மொத்த அரசும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
- மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும்.
- சோதனை நடைமுறைகளை எளிதாக்கி பரவலாக்க வேண்டும்.
- மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.போதுமான மருந்துகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்
- வதந்திகளை தடுக்க வேண்டும்
- மருத்துவர்களுக்கும், ஊழியர்களுக்கும் போதுமான பயிற்சி அளிக்க வேண்டும்
- பாதுகாப்பு கருவிகள், சாதனங்களை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும்
- இது மோசமான நோய், அதனால் கண்டிப்பாக, கவனமாக செயல்பட வேண்டும்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications