கொரோனா வைரஸ்... இளைஞர்களுக்கு அதிகம் பரவுகிறது... உலக சுகாதார நிறுவனம் தகவல்!!
ஜெனீவா: இளைஞர்களை கொரோனா தொற்று அதிகளவில் பாதித்து வருகிறது. இது அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். அல்லது அவர்களுக்கு சிறிய அறிகுறிகள் இருக்கலாம் என்று உலக சுகாதார மையத்தின் மேற்கு பசிபிக் இயக்குநர் டாக்டர் டாகேஷி கசை தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை. பல்வேறு நிறுவனங்கள் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தாலும், நடப்பாண்டு இறுதியில்தான் மருந்து போடப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. கொரோனா தொற்றின் துவக்கத்தில் பத்து வயதுக்கு குறைந்தவர்கள் மற்றும் 60 வயதுக்கு அதிகமானவர்களுக்குத்தான் இந்த தொற்று பரவும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், நாடுகளைப் பொறுத்து அதன் வைரஸ் உருமாற்றம் பொருத்து மாறுபட்டு வருகிறது. தற்போது இதுகுறித்து தகவல் வெளியிட்டு இருக்கும் உலக சுகாதார மையத்தின் மேற்கு பசிபிக் இயக்குநர் டாக்டர் டாகேஷி கசை தெரிவித்து இருக்கும் தகவலில், ''20, 30 மற்றும் 40 வயதுகளில் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. அவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்பது கூட தெரியாமல் இருக்கலாம். அல்லது அதன் அறிகுறிகள் குறைவாக இருக்கலாம். இவர்கள் மூலம் பெரியவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. மேலும், நெருக்கடியான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இந்த தொற்று எளிதில் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 73%த்தைத் தாண்டியது
ஏன் இந்த வைரஸ் சிலரை மட்டும் பெரிய அளவில் பாதிக்கிறது. மற்றவர்களை பாதிக்கவில்லை என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.
உலக அளவில் 22 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 774,600 பேர் உயிரிழந்துள்ளனர். பிப்ரவரி 24 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை 6 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த கால கட்டத்தில் வைரஸ் தொற்று 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்கு 4.5% இருந்து 15%ஆக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.