குரோஷியாவில் "அந்த" விசயத்திற்காக வீடு வீடாக கதவைத்தட்டிய ரத்தக்காட்டேரி!
அந்த விசயத்தில் படு வீக்கான ரத்தக்காட்டேரி வாழ்ந்த நகரத்தைக் காண குரோஷியாவிற்கு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
Recommended Video
குரோஷியா: ஜுர் கிராண்டோ என்ற ரத்தக்காட்டேரியின் கதையைக் கேட்க குரோஷியா நாட்டிற்கு குவிகின்றனர் சுற்றுலா பயணிகள்.
சினிமாவில் மட்டுமே ரத்தக்காட்டேரி பார்த்திருப்பீர்கள், லைவ் ரத்தக்காட்டேரியை லைவ் ஆக பார்க்கவே மக்கள் அந்த நாட்டிற்கு படையெடுக்கின்றனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவில் உள்ள நகரம் கிரிங்கா. இந்த நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஏன் இப்படி சுற்றுலா பயணிகள் இங்கு குவிகிறார்கள் என்று கேட்டார் காரணம் ரத்தக்காட்டேரி கதையைக் கேட்கத்தானாம். நீங்களும் அந்த ரத்தக்காட்டேரியின் ஹாட்டான கதையை தெரிஞ்சுக்கங்க.
செம மூடு ஆளு
கிரிங்கா நகரத்தில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்தான் ஜுர் கிராண்டோ. 1959ல் பிறந்த ஜுர் மனைவி மீது ஒரே மோகத்தில் திளைத்தவர். அந்த விசயத்தில் படு வீக்கான பார்ட்டி. 1656ல் நோய் தாக்கியதில் எமலோகம் போய்விட்டார்.
காதலால் காட்டேரியான ஜுர்
மனைவியின் மீதான தீராத காதல் அவரை ரத்தக்காட்டேரியாக அவதாரம் எடுக்க வைத்தது. இரவு நேரத்தில் தினம் வீட்டுக்கதவை தட்டி மனைவிக்கு தொந்தரவு கொடுப்பாராம். ஆனால் மனைவி இதற்கு சம்மதிக்கவில்லை.
மனைவியின் மந்திர செயல்
பயந்து போன மனைவி ரத்தக்காட்டேரி கணவனிடம் இருந்து தப்பிக்க மந்திரவாதியை நாடியுள்ளார். உடனே வீட்டு வாசலில் எந்திர தகடு கட்டி ஜுர் வருகைக்கு தடை போட்டார் மந்திரவாதி. அப்பாடா தப்பித்தோம் என்று படுத்து உறங்கினார் ஜுர் மனைவி.
வீடு வீடாக கதவை தட்டிய ஜுர்
மனைவியுடன் சேர முடியலையே என்ற கோபம் வெறியாக மாறவே, ஜுர் வீடு வீடாக போய் கதவை தட்டினார். இரவு நேரமானால் கதவு தட்டும் சத்தம் கேட்டு அலறி துடித்தனர். 16 ஆண்டுகளாக ஆட்டி படைத்தது ரத்தக்காட்டேரி.