தியானன்மென் சதுக்க படுகொலைகளின் 25-வது ஆண்டு நினைவுதினம்! ஹாங்காங்கில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!!
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: சீனாவில் ஜனநாயக ஆட்சி கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது தியானன்மென் சதுக்கத்தில் நிகழ்ந்த படுகொலை சம்பவத்தின் 25-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
கடந்த 1989 ஆம் ஆண்டு சீனாவில் ஜனநாயக அரசு வேண்டி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உள்பட பலர் தியானன்மென் சதுக்கத்தில் ஒன்று கூடி போராடினர். அப்போது அரசு மேற்கொண்ட அடக்குமுறையில் பலர் உயிரிழந்தனர்.

இந்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஹாங்காங்கில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
அதேபோல சீனாவின் பல பகுதிகளிலும், தியானன்மென் சதுக்க போராட்டத்தில் பலியானவர்களுக்கு மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications