Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சாரம், உணவு, குடிநீர், எரிவாயு எல்லாம் கட்.. காசாவை முழுமையாக முற்றுகையிட இஸ்ரேல் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: பாலஸ்தீனத்துக்கு உட்பட்ட காசா எல்லை முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்துள்ள இ|ஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான்
கடந்த 7ம் தேதி, காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதலை தொடங்கினர்.

Cut off electricity, food, drinking water, gas, Israel orders a complete siege of Gaza

ஆபரேஷன் அல் அக்‌ஷா புயல் என்ற பெயரில் தாக்குதலை ஹமாஸ் பயங்கரவாதிகள் தொடங்கினர். இந்த தாக்குதலில் இஸ்ரேல் திக்கு முக்காடிப்போனது. ராக்கெட் மழை பொழிந்து ஒருபக்கம் தாக்குதல் என்றால் மற்றொரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சரமாரி தாக்குதலை தொடுத்தனர். இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரை அறிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகூ தாக்குதலை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து, இஸ்ரேலின் போர் விமானங்கள் காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தது. இதனால் ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான சண்டை உக்கிரம் அடைந்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசா நகரில் பொழிந்த குண்டு மழைகளால் காசாவில் உள்ள பல கட்டிடங்கள் தரை மட்டமாகின. இதனிடையே, ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் தங்கள் கட்டுப்பாடுகளில் இருக்கும் பகுதிகளில் உள்ள ஏராளமானோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக துருக்கி உதவியை இஸ்ரேல் நாடியிருப்பதாகவும் துருக்கியும் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 600 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் படைகள் நடத்திய பதில் தக்குதலில் பயங்கரவாதிகள் 400 பேர், பொதுமக்கள் 300 பேருக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் இரு தரப்பிலும் சேர்த்து பலி எண்ணிக்கை 1,300 ஐ கடந்துள்ளது. தாக்குதல்கள் தீவிரம் அடைந்து இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை 1,20,000 மக்கள் வெளியேறியுள்ளனர். காசா பகுதியில் 1,00,000 ரிசர்வ் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு 130 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. பல் ஆண்டுகளாக நடந்து வரும் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாகியுள்ளது. இதனிடையே, காசா பகுதியை முழுமையாக முடக்க உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காசா பகுதியை முழுமையாக முற்றுகையிட்டுள்ளோம். அப்பகுதி அனைத்தும்கட்டுப்பாட்டில் உள்ளன. மின்சாரம், உணவு, குடிநீர், எரிவாயு என எதுவும் கிடைக்க அனுமதிக்க போவதில்லை. எல்லாம் முடக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+