அணுவைப் பிளந்தால் "ஆம்புலன்ஸ், ஹாஸ்பிடல்"... ஆச்சர்யம் தரும் டிஎன்ஏ மர்மங்கள்!
டொரண்டோ: கடுமையாக சேதமடைந்த டி.என்.ஏ.வானது எப்படி செல்லிற்குள் செல்கிறது, பின்னர் அது எவ்வாறு தன்னை ரிப்பேர் செய்து கொள்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம், புற்றுநோய் எப்படி பரவுகிறது என்பதைக் கண்டுபிடிக்க இயலும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
எந்த வகையினரையும் தாக்கும் கொடிய நோய்களுள் ஒன்று புற்றுநோய். மேலை நாடுகளில் இந்த நோய்க்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
புற்றுநோய் செல்கள் எப்படி உருவாகின்றன, அவை எவ்வாறு பரவுகின்றன என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கடுமையாக சேதமடைந்த செல்கள், ரிப்பேர் செய்யப்பட்டு பின்னர் புற்றுநோய் செல்களாக மாறுவது தெரிய வந்துள்ளது.

மருத்துவமனை செல்கள்...
இந்த ஆய்வு குறித்து டொரண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் கரீம் மெக்கெயில் கூறுகையில், "கடுமையாக சேதமடைந்த டி.என்.ஏ.க்கள் சில குறிப்பிட்ட விசேஷமான செல்லிற்குள் செல்கின்றன. அந்த செல்கள் கிட்டத்தட்ட ஒரு மருத்துவமனை போல செயல்படுகிறது. அதன் பின்னர் அங்கு அவை சரியாகிக் கொள்கின்றன.

ஆம்புலன்ஸ்...
ஆனால் இந்த செல்லுக்குள் எப்படி சேதமடைந்த டிஎன்ஏக்கள் சரியாக செல்கின்றன என்பதுதான் தெரியாமல் இருந்தது. இதை தற்போது கண்டுபிடித்துள்ளோம். கிட்டத்தட்ட ஒரு ஆம்புலன்ஸ் போல இந்த செல்கள் செயல்பட்டு சேதமடைந்த டிஏன்ஏக்களை கொண்டு செல்கின்றன.

சரிசெய்யப்பட்ட டி.என்.ஏ.க்கள்...
இந்த டி.என்.ஏ. ஆம்புலன்ஸ் செல்லானது மோட்டார் புரோட்டின் காம்ப்ளக்ஸால் ஆனது. இந்த செல்தான், சேதமடைந்த டி.என்.ஏ.வை சரிப்படுத்துகிறது. சரி செய்யப்பட்ட டிஎன்ஏக்கள் தங்களது இயல்புக்கேற்ப பல்கிப் பெருகும்.

சந்தேகம்...
அதேசமயம், அதில் செல் குறிப்புகள் சரிவர இருக்காது. இதனால்தான் புற்று நோய் ஏற்படுகிறது என்று சந்தேகிக்கிறோம்.

புற்றுநோயாக மாறுகின்றன...
சேதமடைந்த டிஎன்ஏக்களைக் கொண்ட செல்கள் வழக்கம் போல பெருகி வந்தாலும் கூட அதில் குறிப்புகள் முறையாக இல்லாமல் போவதால் அவை புற்றுநோயாக மாறுகின்றன.

உடையும் குரோமோசோம்கள்...
மேலும் குரோமோசோம்கள் உடையும்போதும், சரி செய்யப்படாமல் போகும்போதும் புற்று நோய் ஏற்படுகிறது' என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications