பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
லிமா: பெரு நாட்டின் வடக்கு பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரு நாட்டின் வடக்கு பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியது.

மொயாம்பா நகரின் வடக்கே சுமார் 50 கி.மீ தொலைவில் பூமிக்கடியில் 114 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மொயாம்பமா நகரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் இந்த பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்தும் பொருட்சேதம் பற்றிய உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
நேற்று முன்தினம் வடகொரியா பியூங்கி என்னும் இடத்தில் 5வது முறையாக அணு ஆயுத சோதனையை மேற்கொண்டபோது அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவாகியிருந்தது.












Click it and Unblock the Notifications