துபாயில் நடைபெற்ற கார்ஸ் நிறுவனத்தின் 35வது ஆண்டு விழா
துபாய்: துபாயில் ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தின் 35 ஆம் ஆண்டு விழா 'கார்ஸ் டே' என கடந்த 11ம் தேதி மாலை ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் வெகு சிறப்புற நடைபெற்றது.
கார்ஸ் டாக்ஸி எக்ஸிகியூடிவ் டைரக்டர் அப்துல்லா சுல்தான், மனிதவள மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான், கார்ஸ் எக்ஸிகியூடிவ் டைரக்டர் ஏ.ஜே. கமால், சென்ட்ரல் அகௌண்ட்ஸ் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எஸ்.எம். கத்தீப் மற்றும் ஈடிஏ நிர்வாகத்தினரின் முன்னிலையில் கார்ஸ் டே கொண்டாடப்பட்டது.
ராசல் கைமா கார்ஸ் துணைப் பொது மேலாளர் ஹபிபுல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப் பொது மேலாளர் கோபால் கார்ஸ் நிறுவனத்தின் 35 வருட கால சாதனைகள் மற்றும் முன்னேற்றம் பற்றி விவரித்தார்.
ஏ.ஜே. கமால் கார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட அனைவரையும் நினைவு கூர்ந்தார்.
2012 ஆம் ஆண்டில் நூறு சதவீதம் பணிக்கு வருகை புரிந்த ஊழியர்களுக்கு தங்க பதக்கம் வழங்கி பொது மேலாளர் வலித் எல் அமின் தத்தய் கௌரவித்தார். மேலும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு விருதுகளையும், பரிசுகளையும் வழங்கினார்.
ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக மேஜிக் ஷோ மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
துணைப் பொது மேலாளர் குருமூர்த்தி நன்றி கூறினார்.