'படகு வெடித்த' விவகாரம்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்: குஜராத் அருகே நடுக்கடலில் படகு வெடித்த விவகாரத்தில் இந்தியா சர்வதேச விதியை மீறியுள்ளது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
குஜராத் கடற்பரப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானைச் சேர்ந்த மர்ம மீன்பிடிப் படகு ஒன்று நுழைய முயன்றது. இந்த படகை இந்திய கடலோர காவல்படை நெருங்கிய போது படகில் இருந்த 4 பேர் அதன் கீழ் தளத்துக்கு சென்று வெடி வைத்து தகர்த்து உயிரிழந்தனர்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்த படகு சம்பவம் குறித்து வடமேற்கு கடலோர காவல் படை தலைமை அதிகாரி பி.கே.லோசாலி அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், குஜராத் கடலோர பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் படகை நாங்கள் தகர்த்தோம் என்று கூறி இருந்தார். பின்னர் தான் அப்படி கூறுவில்லை என்று அவர் மறுத்தார்.
எனினும் அவருடைய முந்தைய கருத்தால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறுகையில் இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் பாகிஸ்தானியர்கள்தான். நமது கடலோர காவல்படை அவர்களை துரத்திச் சென்று சரண் அடையும்படி கூறியபோது, அவர்கள் சரண் அடையாமல் படகை குண்டு வைத்து தகர்த்துக்கொண்டனர் என்று கூறி இருந்தார். இந்த சர்ச்சயை அடுத்தும் பாகிஸ்தான் படகு தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பாரிக்கர் கூறினார்.
இந்நிலையில் 'படகு விவகாரத்தில்' இந்தியா மீண்டும் சர்வதேச விதியை மீறியுள்ளது பாகிஸ்தான் சாடியுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அசிப் பேசுகையில், சர்வதேச விதியை மீறுவதை மீண்டும் இந்தியா நிரூபித்து உள்ளது. மனிதாபிமானம் இல்லாமல் அலட்சியமாக நடந்துகொண்டுள்ளது. சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் விவகாரம் போன்று பாகிஸ்தான் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை மட்டும் இந்தியா சுமத்தவில்லை. படகில் இருந்த அப்பாவிகள் 4 பேர் மரணத்தில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தியா மீண்டும் தனது முகத்தை காட்டியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல












Click it and Unblock the Notifications