அகமதாபாத் போல லண்டனிலும் சோகம்! விமானம் டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் கீழே விழுந்து விபத்து
லண்டன்: லண்டன் சவுத்தெண்ட் விமான நிலையத்தில் விமான விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீச் கிராஃப்ட் சூப்பர் கிங் ஏர் ரக விமானம் இந்த விபத்தில் சிக்கியிருக்கிறது.
விமானத்தில் பயணித்தவர்கள் எத்தனை பேர்? உயிரிழப்புகள் எத்தனை என்பது மீட்பு பணிகளின் போது தான் தெரிய வரும். விமானம் ஓடுபாதையிலிருந்து, டேக் ஆஃப் ஆன கொஞ்ச நேரத்தில் தரையில் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது. ஓடு பாதையிலிருந்து கொஞ்ச தூரத்தில் விமானம் விழுந்த இடத்தில் கரும் புகையும் நெருப்பும் மேலெழுவதை பார்க்க முடிகிறது. இத தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில், ஏர் இந்தியா விமானம் ஒன்று சமீபத்தில் அகமதாபாத்தில் விபத்தில் சிக்கியதில் 260 பேர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து உலகம் முழுவதும் விமான விபத்துக்கள் கவனம் பெற்று வருகின்றன.
ஒவ்வொரு முறை விமானங்கள் விபத்தில் சிக்கும்போதும், அதன் பாதுகாப்பு மேலும் மேலும் அதிகரிக்கப்படுகிறது. இருப்பினும் உலகம் முழுவதும் விமான விபத்துக்கள் குறையவில்லை.
சவுத்தெண்ட் விமான நிலையத்தில் நடந்த விபத்து குறித்து உள்ளூர் போலீசார் கூறுகையில், விபத்து மிகவும் கொடுமையானதாக இருந்ததாக தெரிவித்திருக்கின்றனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications