For Daily Alerts
Just In
கப்பலில் வெடிக்காத குண்டை அப்புறப் படுத்தியபோது விபத்து: 4 அமெரிக்க ஊழியர்கள் பலி
சான் டீகோ: அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், கப்பலை சுத்தம் செய்த போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாகப் பலியானார்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கேம்ப் பென்டல்டன் என்ற இடத்தில் கப்பலை சுத்தம் செய்து கொண்டிருந்த 4 அமெரிக்க கப்பல் ஊழியர்கள், வெடிக்காத குண்டை அப்புறப்படுத்தும் போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் சிக்கினார்கள். இதனால் சம்பவ இடத்திலேயே அவர்கள் நால்வரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்ததை உறுதி செய்துள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர், குண்டுவெடித்ததால் தான் ஊழியர்கள் பலியானார்களா என்பதை தெரிவிக்கவில்லை.
சான் டீகோ நகரில் இருந்து வட பகுதியில் அமைந்த உட்புற கடற்படை தளத்தில் அவர்கள் பலியானார்கள் என என்.பி.சி. செய்தி வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Comments
English summary
Four U.S. Marines were killed on Wednesday in an accident while clearing a training area of obstructions at Camp Pendleton, just north of San Diego, California, a military spokesman said.
Story first published: Thursday, November 14, 2013, 14:12 [IST]