உச்சக்கட்டத்தில் போர்.. இஸ்ரேல் தாக்குதலால் அலறும் லெபனான்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
டெல்லி: லெபானான் மீது இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்கள், கப்பல் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையே இருந்த போர் தற்போது, லெபனான் நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்த போருக்கான தொடக்கமும் முடிவும், அமெரிக்கா கையில்தான் இருக்கிறது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் அடைக்கலம் தேடி மத்திய கிழக்கு பகுதிக்கு வந்தவர்கள்தான் ஜியோனிஸ்ட்டுகள் எனப்படும் இஸ்ரேலியர்கள். மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாம் பரவி இருக்க, இவர்கள் மட்டும் மாற்று மதத்தினராக இருந்தனர். இவர்களை பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் அமெரிக்காவும், பிரிட்டனும் தங்க வைத்தது. இனி இதுதான் உங்கள் நாடு என்றும் சிறிய நிலப்பரப்பை ஜியோனிஸ்ட்டுகளுக்கு பிரித்து கொடுத்தது. இந்த சிறிய நிலப்பரப்புக்கு இஸ்ரேல் என்று பெயரிடப்பட்டது.
ஆனால் அப்போது தொடங்கி இப்போது வரை, இஸ்ரேல் பெரிய அளவுக்கு விரிவடைந்திருக்கிறது. பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதியை இஸ்ரேலாக மாற்றப்பட்டது. இதுதான் இன்று நடக்கும் போருக்கு தொடக்கப்புள்ளி. ஜியோனிஸ்ட்டுகளின் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் மேலும் தங்கள் நாட்டின் பரப்பை விரிவுப்படுத்த முயல, அதற்கு பாலஸ்தீன மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த எதிர்ப்பில் உருவான ஆயுதம் தாங்கிய குழுதான் ஹமாஸ்.
கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1500க்கும் அதிகமானவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், இறந்தவர்களின் சடலங்கள் தொடர்பாக எந்த புகைப்படமும் பொதுவெளியில் பகிரப்படவில்லை. இப்படி இருக்கையில், இதனை காரணமாக வைத்துக்கொண்டு மிச்சம் மீதமிருக்கும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதில் இதுவரை 41 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். குழந்தைகளும், கர்ப்பிணிகளும், முதியோரும் நோய் தொற்று அபாயத்தில் இருக்கிறார். போரின் தீவிரம் குறையவில்லை. ஒரு கட்டத்தில் இந்த தாக்குதலை பார்த்து 'ஹிஸ்புல்லா' அமைப்பு கொதித்து எழுந்தது.
இது ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸுக்கு சப்போர்ட் செய்யும் அமைப்பாகும். தற்போது லெபனானிலிருந்து இயங்கி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக, ஹமாஸுடன் கைகோர்த்து ஹிஸ்புல்லா களத்தில் இறங்க.. இஸ்ரேல் கொஞ்சம் தடுமாறியது. இருப்பினும் அமெரிக்க உதவியால் சுதாரித்துக்கொண்ட அந்நாடு, தற்போது லெபனான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
பேஜர், வாக்கி டாக்கி என சைபர் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், போர் விமானங்களை கொண்டு நேரடி தாக்குதலிலும் இறங்கியது. இதில் 600க்கும் அதிகமான லெபனான் மக்கள் உயிரிழந்தனர். இப்படியே விட்டா.. மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடையும் என்று உணர்ந்த ஐநா, உடனடியாக இது குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டியது. ஆனால் இப்போது வரை இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவில்லை.
இப்படி இருக்கையில், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. லெபனானில் உள்ள இந்திய தூதரகம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications