அமெரிக்கா: பெட்எக்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்- பலர் காயம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கூரியர் நிறுன குடோனில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஆறுபேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் கென்னசா பகுதியில் பெட்எக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நாட்டின் நேரப்படி இன்று காலை 5.45 மணிக்கு பெட்எக்ஸ் நிறுவன குடோன் பகுதியில் ஒரு மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் நிறுவன ஊழியர்கள் 6 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடந்துவருகிறது.
இதுகுறித்து பெட்எக்ஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறுகையில், முதலில் எங்களது ஊழியர்கள் உயிரை காப்பாற்ற முயற்சி செய்வதே முக்கியம். அதன்பிறகு அடுத்தகட்ட தகவல்களை பகிர்ந்துகொள்கிறோம் என்றார்.
இதனிடையே துப்பாக்கி சூட்டில் ஒருவர் ஈடுபட்டாரா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கும் இதில் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications